Showing posts with label குசும்புக் கவிதை.... Show all posts
Showing posts with label குசும்புக் கவிதை.... Show all posts

Friday, June 5, 2015

அவளது இடை ....

பொசுக்கென்று 
என் வலது கை 
அவளது 
இடது இடையை 
அழுத்திற்று.. 

அதே 
துரிதகதியில் 
அவளது 
வலது கை 
எனது 
இடது கன்னத்தைப் 
பளீரென்று 
பதம் பார்த்தது.. 

இந்தத் தாக்குதலை 
எந்த அளவுக்கு 
நான் எதிபார்க்கவில்லையோ 
அந்தளவுக்கு 
எதிர்பார்த்தேன் என்பதும் 
உண்மை தான்.. 

கொசுவையும் 
ரத்தத்தையும் 
அவள் இடை பதித்த 
எனது உள்ளங்கையை 
அவளிடம் காண்பித்த 
மாத்திரத்தில் 
கண்களிலும்   
வாய் திறந்தும் 
அவள் கேட்ட மன்னிப்புக்கள்  
"அப்பாடா " என்றிருந்தன.. 

சற்று முன்னர் என்னைக் 
கடித்த கொசுவை 
நசுக்கியது .. இப்படி 
ஒரு சம்பவத்துக்கு 
உதவிற்று.. 

ற்றொரு நாள் 
நிஜமாகவே 
அவளது இடையைக் 
கடித்துக் கொண்டிருந்த 
கொசுவை 
கண்டும் காணாமலே இருந்தேன்.. 
அவளே பிற்பாடு 
சொறிந்து கொண்டாள் .. 
--மனைவி என்று 
ஆன பிற்பாடு 
கொசுக் கடித்தால் என்ன.. 
தேள் கடித்தால் தான் 
என்ன?? ... 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...