Showing posts with label pudhukavidhai ?. Show all posts
Showing posts with label pudhukavidhai ?. Show all posts

Sunday, May 29, 2016

காதல் குறித்து..

Image result for symbol of love and sex
காதல் ----
கவிதை எழுத 
வைத்துவிடுகிறது..
மய்யில்லாத பேனாவை 
வீசிவிட்டு 
ரத்தங்கீறியாவது....!

ஆனால் காமம் .. 
மைநிரம்பிய பேனாவையே 
முனையுடைத்து 
ஒன்றுமற்று வெறுமே 
புடைத்து நிற்கச் செய்கிறது...!!

எந்தத் தந்திரங்களும் அற்று 
காதல் ... நம்மை மிக இயல்பாய் 
கனிந்து விடச் செய்கிறது.. 

காமமோ.. 
எந்த வயதில் பீறிட்டாலும்
பிஞ்சில் பழுத்த 
குற்ற உணர்வையே 
வியாபிக்கச் செய்வதேனோ? 


கொடிய நோயென 
காவியங்களால் அடையாளப் 
படுத்தப் பட்ட காதலின் 
முன்னிலையில்....

மருந்தாகி விடுகிற 
காமத்தை .. 
மலரினும் மெலிது
என்கிறது வள்ளுவம்.. ?
Image result for symbol of love and sex

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...