Showing posts with label கேவலம். Show all posts
Showing posts with label கேவலம். Show all posts

Sunday, August 30, 2009

கொடுமையின் மறுபக்கம்...

அரசாங்க உத்யோகத்தில் உள்ளவர்கள் மாத்திரம் தான் துவரைப்பருப்பு வாங்கி சாம்பார் வைக்க முடியும் என்று நினைக்கிறேன்.
எனென்றால் சந்தையில் ஒரு பொருள் விலை ஏறும் போது இவர்களுக்கு சம்பளமும் ஏறி விடுகிறது..
கல்லூரி பேராசிரியர்களுக்கு 62 ஆயிரம் ரூபாய், மாத சம்பளம்.. மாதத்திற்கு 20 நாட்கள் வேலை இருந்தால் அதிகம். அதில் நாள் ஒன்றுக்கு ரெண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் வகுப்பு எடுப்பாரா?
ஆக, ஒரு மணி நேரத்திற்கு 1100 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்..
சாதாரண மக்கள் நூறு கிராம் து.பருப்பு வாங்கவே நாற்பது முறை யோசிக்க வேண்டி உள்ளது..
இந்தியா, ஒரு சாரார்க்கு மட்டும் தான் வல்லரசு ஆக முடியும் போலும்..
மற்றொரு சாரார்க்கு கட்டியிருக்கிற கந்தல் கோவணமும் கழன்று போகும் என்றே தோன்றுகிறது...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...