Showing posts with label SUPER SCRIBLLES.. DO MISTAKE ME. I LOVE IT.. LOL... Show all posts
Showing posts with label SUPER SCRIBLLES.. DO MISTAKE ME. I LOVE IT.. LOL... Show all posts

Saturday, August 23, 2014

சும்மா ஜாலியா எழுதி இருக்கேன்.. நத்திங் சீரியஸ் மாமு...

எதாச்சும் பறவையோ மிருகமோ "மனுஷனா பொறந்திருந்தா பரவாயில்லே" என்று கவலைப் பட்டிருக்க வாய்ப்பே இருந்திருக்காது என்று ஒரு மனுஷனாக இருந்து ஊகிக்க முடிகிற என்னால், 'இந்த மானங்கெட்ட மனுஷப் பொறப்பே ஆகாதப்பா' என்கிற அனுமானத்தில் அன்றாடம் உழல்கிற பல மனிதர்கள் உண்டென்கிற விஷயம் எனக்கு மட்டுமல்ல, இந்த மனுஷனா பொறப்பெடுத்த 90 சதவிகித மனுஷங்களுக்கு வந்திருக்கும்னு சுலபமா நெனச்சுட முடியுது..

எது எப்டியோ பொறந்தாச்சு.. சாகற வரைக்கும் வாழ்ந்தாகணும் .. தற்கொலையே செஞ்சுக்க நெனச்சாலும் அதையும் கடந்து பொண்டாட்டி புருஷன் புள்ளைங்களுக்காக யாரா இருந்தாலும் பொழப்போட்டியாகணும் ..
இதையெல்லாம் தாண்டி "பொறந்தது எவ்ளோ நல்லதா போச்சுடா சாமி.. !" என்று புளகாங்கிதம் அடைகிற ஒரு தருவாய் வராமத் தான் போயிடுமா என்ன?

நம்மள நம்பி நாலு ஜீவன்கள்.. அத நம்பி நானு.. எங்கள நம்பி இன்னும் சிலபேரு, பலபேரு.. இப்டியே இம்சை இல்லாம பரமானந்தமா இந்த வாழ்க்கைய சாகாமலே ஒட்டிக்கிட்டே இருக்கணும் ங்கற வெறி ஒரு தருணத்துல பிச்சொதறாதா என்ன??

உடலுள மனசுல வியாதியோ கவலையோ இல்லாம எந்நேரம் பார்த்தாலும் கோவில் குளம் , கோவா , சிங்கப்பூர் மலேசியா ன்னு டூர் அடிச்சுட்டு , அடுத்ததா வேற எதாச்சும் புதுசா சந்தோஷமா அட்வெஞ்சரா யோசிச்சு,  முடிஞ்சா யாருக்கும் தெரியாம அந்த மேகங்களைக் கடந்து நீல வானத்தை வெரல் நகங்களால ஒரசிட்டு வந்து பெருமை பீத்திக்கலாமா ன்னு ஆச போட்டு மனசை அளப்பரை செய்யுது..

நம்ம சாதனைய சொல்ற போது எவனும் நம்பாம, அப்புறம் அதுக்குப் ப்ரூபா ஹய் டெபனிஷன் வீடியோவுல செஞ்ச பதிவைக் காட்டி அவன் நக்கல் செஞ்ச வாயை அடச்சு  "அடேங்கப்பா" ன்னு சொல்ல வைக்கிற ஒரு த்ரில் இந்த மனுஷப்  பொறவிக்கு மட்டும் தான்யா பாஸிபில் ..
"பூமிப் பரப்புல இருந்து 8வது கிலோமீட்டரில் வந்து பறக்கறேனாக்கும் " என்று எந்தக்  கழுகும் பெருமை பேசுவதில்லை..

இந்த மனுசப் பயலுக்கு மட்டும் தான் கான்ஸ்டிபேஷன் பிரச்சினை.. டயோரியா பிரச்சினை  .. ப்ரெஷர் பிரச்சினை .. சுகர் பிரச்சினை. வெய்ட் பிரச்சினை . இளைச்சு இருக்கறது பிரச்சினை.
உசிரோட இருந்தா பிரச்சினை. செத்தா பிர.. . யெஸ் .. செத்தா மட்டும் தான் பிரச்சினை இல்லை. அதாவது செத்தவனுக்கு.. இருக்கறவனுக்கு தான் கூட இருந்தவன்  செத்தாலும் பிரச்சினை.. சாகாம கூடவே இருந்தாலும் பிரச்சினை.. ஹிஹிஹி.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...