Showing posts with label tribute to tamil lyricist vaali... Show all posts
Showing posts with label tribute to tamil lyricist vaali... Show all posts

Saturday, July 20, 2013

கவிஞர் வாலி..

ம்ஜியார் சம்பந்தப்பட்ட பிரபல கலைஞர்கள் சொல்லி வைத்தாற்போல இதே வருடம் மறைவது ஒருவகையான டச்சிங்காக உள்ளது..
சில மாதங்கள்  முன்னர் தான் டி எம் எஸ் மறைந்தார்... இப்போது கவிஞர் வாலி..

சினிமா பாடல்களை சற்றே புரிகிற விதமாக எழுதிவந்தார்.. எளிமையும் இளமையும் ஒருங்கே இணைந்த அவரது பாடல்கள் பல, பற்பலராலும் மிகவும் ரசிக்கப் பெற்று வந்தன எனில் அது மிகையன்று...!!

தரை மேல் பிறக்கவைத்தான் என்று படகோட்டியில் பாடிய டி எம் எஸ் .. அதை எழுதிய வாலி.. அதற்கு வாயசைத்து நடித்த எம்ஜியார்.. மூவரும் இந்த ஷணத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை என்கிற கற்பனை பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்ற போதிலும் ..யோசித்துப் பார்க்கையில் சற்றே ஓர் இனம்புரியா கவலை மனசைக் கவ்வுவதை உணரத்தானே முடிகிறது??

உதாரணமாக சொல்லப் பட்ட அந்த மூவருமே காலத்தால் அழிக்கமுடியாத சாதனைகளை செய்துவிட்டுத் தான் மறைந்துள்ளனர்....! இப்படி நாமதேயங்களை பலமாக இந்த பூமியிலே பதித்துவிட்டு மறைந்தவர்கள் என்றென்றும் மக்களால் நினைக்கப் படுவர், அவரது படைப்புகள் ரசிக்கப்பெறும்...

ஆனால் எல்லாருக்குமா மரணம் இந்தப் பரிசுகளை வைத்துவிட்டுப் போகிறது?.. ஏதோ சிற்சிலர் மாத்திரமே இவ்வித நிழல் அடையாளங்களாகவாவது  இந்த உலகில் உலவுகிற பாக்கியம் பெறுகின்றனர்.. பற்பலரும், வெறுமனே இருக்கிற வரைக்கும் நினைக்கப் படுபவர்களாகவும் , சென்ற பிறகு அவரது குடும்பம் சார்ந்த உறுப்பினர்களே சில நாட்களில் மறந்து விடுகிற வகையிலும் வாழ்ந்து மறைகின்றனர்..

தோன்றின் புகழொடு  தோன்றுக  அதர்வைஸ் பொறக்காம இருக்கறதே பெட்டர் ன்னு  நம்ம ஆஸ்தான வள்ளுவன் ரெண்டே வரியில சுலபமா போட்டெ றிஞ்சுட்டுப்  போயிட்டாரு.. இங்க அவனவன் பொண்டாட்டிகிட்ட ஜெயிக்கிறதையே பெரிய  போராட்டமா வச்சிருக்கான்.. ஹிஹி.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...