என் அற்பத்தனங்களும்
சபலங்களும்
எனது நண்பர்களுக்கு
மாத்திரமே
பிரத்யேகமானவை...
மனைவியினிடத்து
மிக நாசுக்காகவும்
அற்பத்தனங்களோ
சபலங்களோ சற்றும்
இது வரை வாழ்வில்
அறிமுகமே ஆகாத
தொனியில்....
வார்த்தைகளில் ஆகட்டும்
செய்கைகளில் ஆகட்டும்
சுலபத்தில் விரசங்களை
உட்புகுத்தி தன்னை
மிக கேவலமான
மனிதர்களாக சித்தரிப்பதில்
மனைவி குழந்தைகள் நண்பர்கள்
மற்றும் எந்த நபர்களிடமும்
கிஞ்சிற்றும் வெட்கமே அற்ற
சிலரை நான் அடையாளம்
காண்கிறேன் அனேக சமயங்களில்....
கீழ்த்தரமாக அவர்கள்
புரிபட்டாலும்
யதார்த்தம் தொலையாதவர்கள்
என்றே என்னால் உணரவியல்கிறது...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
முதற்கண் பிச்சை இடுபவர்கள் நிறுத்த வேண்டும்.. பிச்சைக் காரர்கள் தானாகக் காணாமல் போவார்கள்.. உழைக்கத் துவங்கி காசு சேர்ப்பார்க...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
அருமையா இருக்கு
ReplyDeletethank you sathish sir...
ReplyDelete