மூன்று நாள்
முள்தாடியை
விரல்களால் நெருடியபடி
ஓர் நல்ல கவிதைக்கு
யோசித்துக்கொண்டிருப்பதைக்
காட்டிலும் -
நேர்கிற சுகமான இயல்பான
அனுபவங்களைக்
கவிதையாக பகிர்ந்துகொள்ளப்
பிரயத்தனிப்பது
நல்ல கவிஞனின் அடையாளம்..!
சமயங்களில்
அனுபவக் கவிதைக்கான
வார்த்தைகள் பிடிபட
மறுக்கலாம்..,
கற்பனையாகப் புனைகையில்
சுவாரஸ்யமான வார்த்தைகள்
பீறிடலாம்...
--அதற்காக அந்த அனுபவ
உணர்வுகள் அழிவதில்லை.!!
கற்பனைக்கு பிடிபட்ட
வார்த்தைகள் காகிதப்பூக்கள்..,
வார்த்தை பிடிபடாத
அந்த அனுபவ உணர்வுகள்
வாசனை மலர்கள்..!!
கிட்டத்தட்ட இந்தக்
கவிதையைக்
கூட மணக்காத
காகிதப்பூ போல தான்
உணர்கிறேன் நான்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Thursday, November 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
No comments:
Post a Comment