அசை போடக்கூட அலுத்துப்போகிறது எனது அன்றைய நாட்களின் காதல் அனுபவங்கள்.. அன்றைய போழ்துகளில் மிகுந்த மென்மையும் மேன்மையும் பொதிந்து உணரப்பட்ட காதல் இன்று ஓர் தடயம் கூட இழந்த தன்மையில் பாழ் பட்ட அரண்மனை போல வவ்வால் எச்சம் போல ஓர் அசூயை கொண்டு நாறுகிறது என் மன ஓட்டங்களில்...
பேரானந்தங்களையும் ரம்மியங்களையும் ஓயாமல் அள்ளி வழங்கிய காதல் இன்று வெறுமனே ஓர் லஜ்ஜையான ஞாபகமாய் என்னில் வியாபித்து, உபயோகமற்ற பாசி போல படர்ந்து கிடக்கிறது...
காதலித்த நாட்களில் ... இந்தக்காதல் என்கிற ஓர் அதியற்புதமான உணர்வு பின்னொரு நாளில் மலரும் நினைவுகளாய் மனதில் பொங்கி என்னை சிலிர்க்க வைக்கக்கூடும் என்று அனுமானித்திருந்த எனக்கு இன்று ஓர் பெரிய ஏமாற்றமாய் தான் உள்ளது...
காமம் தவிர்த்து மிகவும் புனிதமாகவும் தெய்வீகமாகவும் மாத்திரமே உணரப்பட்ட காதல் ... எங்கோ தொலைந்து போய் இன்று ....
காதல் இழந்த காமம் தான் அவ்வப்போது தொனிக்கிறது ...
இந்தக் காதல், காமம் இரண்டும் தான் மனித வாழ்வின், பிற உயிரனங்களின் ஆதார ஸ்ருதி என்றாலுமே கூட , மற்ற பிரச்சினைகள் சுலபத்தில் மையம் கொண்டு விடுவதால் , இவை இரண்டும் தன் வீரியங்களை இழந்து நினைத்துப்பார்க்கக்கூட சாத்யமற்றுப்போகிற விபரீதம் கொஞ்சம் வேதனை தான்...
சுந்தரவடிவேலு...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment