ஒரு முறை
உன்னை அனிச்சையாக
தரிசிக்க நேர்ந்ததன் பொருட்டு
---ஒவ்வொரு முறையும்
அதே அனிச்சையை
எதிர்பார்க்கிறேன்...!!
என் அவநம்பிக்கைகளை
கிழித்துப்போட்டது உன் புன்னகை..
என் நிராசைப் பட்டியல்கள்
கசக்கி வீசப் பட்டன..
இனி வாழ்வு நெடுக
வசந்தம் பீடு நடை போட
ஆயத்தமாகி விட்டதாக
அடித்து சொன்னேன் நண்பர்களிடம்..!!
உள்ளார்ந்து வேரூன்றி கிடக்கின்றன
சந்தேகங்கள் இன்னும்...
உன் புன்னகை கிழியக்கூடும்,
என் வசந்தங்கள் அழியக்கூடும்.., -
--உன்னிடம் பேச ஆரம்பித்த
மூன்றாம் நாளே இதை சொல்ல
வாய் திறந்தேன்..!!
கிடைத்திருக்கிற கிஞ்சிற்று
நிம்மதியையும்
கோழி கழுத்தை திருகி எறிவது
போன்ற முட்டாள்தனத்தை
எதற்கு செய்ய வேண்டும்
என்கிற காதல் அறிவு எனக்கு...
சொல்வதற்கில்லை.,
இந்த முறை காலத்திற்கு
என்னை ஏமாற்றும் விருப்பம்
இல்லாதிருக்கலாம்..!!
சுந்தரவடிவேலு...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
excellant
ReplyDelete