வயோதிகம்-
எந்த இழையில் வந்து
இளமையைக் கபளீகரிக்கிறது
என்கிற புரியாத
புள்ளி விபரங்களோடு......
நரையைத்திரையிட
ரசாயனம் தேடும் கிழமனது..
கருப்பாய் நடிக்கத்துவங்கும்
நரைமுடிகள்...
-செயற்கை கருமை
குறித்து அடியாழக்
குற்ற உணர்வொன்று...!!
நிகழ்காலமென்பது
எல்லா ப்ராயங்களிலுமே
தொந்தரவாகவே தான்
உணரப்படுகிறது..,
16 வயதிலுமே கூட
கடந்து போயிருந்த
12 வயது குறித்த
கவலைகள் தான்..
திரும்ப அந்த வசந்தங்கள்
வரவே வராதே என்கிற
அநியாய ஏக்கங்கள்...
--அதனைக்காட்டிலுமான
வசந்தங்கள் தற்போதைய
அனுபவத்தில் இருந்தாலும்
கடந்து போன அந்த
எளிய வசந்தங்கள் கூட
வனப்பாகப் புரிபடுகிற ஒரு மாயை
புதிர்தான்...
வனப்பாகப் புரிபடுகிற அந்தப்புதிர்
ஓர் மாயை தான்...!!
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment