காதலின் விரல்களைப்
பிடித்து குழந்தை போல
நடை பயின்ற காலங்கள் போய்
இன்று-
காதலைக் குழந்தையாக்கி
தாலாட்டுகிறேன்..
நமக்கெல்லாம் இளமை முதலிலும்
மூப்பு பிற்பாடாகவும் வருகிறது. ..
காதல் மட்டும் கடைசியில்
குழந்தையாகி விடுகிறது நம்
யாவருக்கும்..
அதன் யவ்வனங்களும்
மழலைமைகளும் நம்மையெல்லாம்
சுகந்தமானதோர் மூர்ச்சையில் ஆழ்த்தி
விடுகிறது..
வாழ்கையின் ஆதார ஸ்ருதியாகி
அபஸ்வரங்களைக் கூட
ஆனந்த ராகமாக்கி விடுகிறது காதல்..
அதன் மலர்ச்சி நமது எல்லா
வரட்சிகளையும் கேலியாக்கும்
வல்லன்மை கொண்டது..
ஆதலால் காதல் செய்வீர் யாவருமே..
சுந்தரவடிவேலு, திருப்பூர்.
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Wednesday, August 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
No comments:
Post a Comment