கோயில் வாசலில்
எனக்காக காத்துக்கிடந்தன
என் பாதணிகள்...
தூய பகுதிகளில் மட்டுமே
என் பாதங்களை அனுமதிக்கும்
என் பாதணிகள்
அசுத்த பாதைகளில் என்னை
ஏற்றிக்கொள்ளும்..
புற்களை மட்டுமே ஸ்பரிசிக்க
இறங்கச்சொல்லும் என் பாதணிகள்
முள்குத்தல்களை முணகாமல்
வாங்கிக்கொள்ளும்..
கோயிலுக்குள் வராத நாத்திகர்கள்
என் பாதணிகள்.
எல்லா பொருள்களும்
கைகளால் களவு போகும்..
பாதணிகள் மட்டுமே
கால்களால் ...
வார் அறுந்தால் கூட
மாற்றி புதியதாய் வாங்க
உத்தேசிக்கும் என்னிடம் -
என் பாதணிகள்
தன்னையே தைத்துப்
புதுப்பித்துக்கொள்ளச்சொல்லும்
மிகவும் அற்புதமான பிரதேசங்களிலேயே
என் பிரவேசங்கள் நிகழும் ஆதலால்
என் பாதங்கள்-
என் பாதணிகளுக்கு சுவாரஸ்யமானவை...
சுந்தரவடிவேலு,
திருப்பூர்..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
//கோயிலுக்குள் வராத நாத்திகர்கள்
ReplyDeleteஎன் பாதணிகள். // :-)
ஸூபர்!
இந்த வரிகளை ரசித்த கூட்டம் நிறைய இருக்கு.
அவர்களுக்கு உன் இமெயில் கொடுத்தேன்... மதிப்புரை வந்திருக்கும்!
ரொம்போ ரொம்போ அருமை!
ReplyDelete