Tuesday, September 1, 2009

உன்னிடத்தில் மட்டும்..

உன் நிபந்தனைகளுக்குக்
கட்டுப்படுவதையே
சுதந்திரமாய் உணர்கிறேன்...
உன் யாதொரு வேண்டுகோளுக்கும்
இணங்கிடும் அவசரம்
எப்போதும் என் வசம்...!

என் எல்லா வட்டாரங்களும்
கல்லுளி மங்கனாய்
என்னை அபிப்ராயித்திருக்க,
--உன்னிடம் மாத்திரம்
என் தாமதத்தை நான்
மிகவும் அநாகரிகமாய் உணர்கிறேன்..!!

உன்னிடம் மட்டுமே
எனக்குப் பறந்து காண்பிக்க
வேண்டுமென்று தோன்றுகின்றது.,
--சிறகுகள் சிதைந்த நிலையிலும் கூட..!!!

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

2 comments:

  1. //உன்னிடம் மட்டுமே
    எனக்குப் பறந்து காண்பிக்க
    வேண்டுமென்று தோன்றுகின்றது.,
    --சிறகுகள் சிதைந்த நிலையிலும் கூட..!!!// What a bird!

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை
    கடைசி வரி வரை அத்தனையும் அழகு, //சிறகுகள் சிதைந்த நிலையிலும் கூட..!!!// :-)

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...