Saturday, September 5, 2009

சுதந்திரம்...

நிழல்கள் குறித்த
அதீத ப்ரக்ஞை எனக்கு..
-நிஜங்களைப் புறக்கணிக்கிறேன்
என்பதே புரியாமல்...!
...அனிச்சைகள் மீதான
எதிர்பார்ப்புகளால் ,
நிகழ்கிற நிதர்சனங்கள் குறித்து
சற்றும் ப்ரக்ஞை இல்லை எனக்கு...
வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டே
வீட்டு விலாசம் தொலைந்த
கவலையில் என் அறை ஜன்னலோரம்
நான்....
வீடு ஜப்திக்கு வந்த போது
விலாசம் கிடைக்கப் பெற்றது...

--வெளியுலகம்
ஜன்னலற்றும் இன்னலற்றும்
இருக்கக் காண்கிறேன்...

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...