Wednesday, September 16, 2009

மனித இயல்புகள்...?

தேடல்களும்

தோல்விகளும்

எந்நேரமும் உடனிருப்பவை..

ஓர் இழையில் தேடுவதே

சலிப்பாகி, தேடுவதை

நிறுத்தி விடுகையில்...

கிடைக்கும் தேடியது..!

அவ்வாறே தோல்விகளும்...

--வெற்றிக்கான ஒவ்வொரு

பிரயத்தனத்தின் போதிலும்

போட்டி போட்டுக்கொண்டு வந்து

வெற்றியைப் பின்னுக்குத் தள்ளி

விட்டு ஜெயித்து விடுகின்றன

தோல்விகள்.....

பிற்பாடு, பின்னொரு நாளில்

சாவகாசமாக வருகிறது வெற்றி..!

தாமதமாகவே வந்தாலும் கூட

தேடியது கிடைக்கையிலும்,

தோற்றது வெற்றி அடைகையிலும்

ஓர் புது மெருகுடன் தான்

சந்தோஷம் மனசைக் கவ்விக்கொள்கிறது..,

தேடல்களும் தோல்விகளும் நம்முடன்

அத்யந்தமாகி நெடுங்காலம் வீற்றிருந்து

வந்தாலும் ஏதோ அன்னியமாகியது போல

உடனே அவைகளைப் புறந்தள்ள

ஆசையும் அவசரமும் படுகிறோம்...!!

சுந்தரவடிவேலு,திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...