Monday, January 25, 2016

கஞ்சன் டைரியில்..

முதற்கண் 
பிச்சை இடுபவர்கள் 
நிறுத்த வேண்டும்.. 
பிச்சைக் காரர்கள் 
தானாகக் காணாமல் 
போவார்கள்.. 
உழைக்கத் துவங்கி 
காசு சேர்ப்பார்கள்.. 

உழைத்து நாம் 
கொடுக்கிற காசு 
அவர்களை 
உழைக்காமல் 
சம்பாதிக்க வைக்கிறது..!

தானப் பிரபுவாக 
நம்மைத் தகுதி 
உயர்த்திக் காண்பிக்கிற 
காசு.. 
திருவோடு சேர்ந்ததும் 
நம்மை சபிக்கத் 
துவங்கும் ?..

'கோவில் உண்டியலில் 
சேர்ப்பான்' என்று 
கருதினாலோ ...

திருவோட்டில் சேர்த்து 
பிச்சைக்காரன் பீடியூத 
உதவுகிறானே!.. 

கவலை வேண்டாம் 
திருவோட்டுக் காசே.. 
பீடி விற்கிற 
பெட்டிக் கடைக்காரன் 
நிச்சயம் உன்னை 
உண்டியலில் சேர்ப்பான்...!!


2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...