Thursday, January 28, 2016

பிரபலம்..

னித இனத்தில் மட்டும் "பிரபலமானவன்" என்பவனுக்குக் கிடைக்கிற பிரம்மாண்ட மரியாதை என்பது இந்த ஆறாம் அறிவின் பிரதான கிறக்கம் அல்லது முட்டாள் தனம் என்று சொல்லப் பொருந்துமோ?

நமது இனத்தில், நமக்குப் பாய்கிற ரத்தம், சதை நரம்பு எலும்பு .. அடிபட்டால் பிடிக்கிற சீழ்.. பசி வந்தால் ருசியறியாமல் கிடைப்பதை உண்டு வயிற்றை நிரப்புதல், பசி இல்லை எனில் அமிர்தமே கிட்டினும் புறக்கணித்தல் ... என்கிற அதே செயல்பாடு கொண்ட ஒரு உடம்புக்கு நாமளிக்கிற மகத்தான மரியாதை என்பது எனக்கு எப்போதுமே தலையாய மாயை போன்றொரு தோற்றுவிப்பை வெளிக் கொணரும்.. !

முண்டியடித்துக் கொண்டு அந்த நபரின் ஆட்டோகிராப் வாங்க அலைபாய்வது, அந்த சற்று நாழிகையில் கிடைக்குமா கிடைக்காமல் போய் விடுமா என்று அங்கலாய்த்து கலவரப் படுவது.. கையெழுத்து வாங்கி விடும் பட்சத்தில் என்னவோ செயற்கரிய நிகழ்வை நிகழ்த்தி விட்ட பிதற்றலில் குதூகலிப்பது.. 

--ஒவ்வாத ஒருவித அசூயையில் இதனை எல்லாம் விலகி நின்று கவனிக்கிற துரதிர்ஷ்டங்கள்  அவ்வப்போது எமக்கு நிகழும்.. 

ஒரு நபரின் துணிச்சல் நிரம்பிய திறன் அவனை இப்படி வேற்றுமைப் படுத்தி, ஒரு குழாமையே தன்வசப் படுத்துகிற இந்த செயல் மனித வரலாறுகளில் மட்டுமே இடம்பெற்று  வருகிற சாபக்கேடு என்று நான் சொன்னால், அதனை மறுதலித்து "பெரும் வரம் இது " என்று வாதிடுகிற, வாதிட்டு வெற்றி கண்டு விடுகிற அறிவாளிகளும் பகுத்தறிவு வாதிகளும் நிறையப் பேர்கள் உண்டு என்பதை நான்  நன்கறிவேன்.. 


அவ்வித ஆளுமைத் திறன்கள் அற்ற பேடிகளும் கையாளாகாத நபர்களுமே பொறாமை பொச்சரிப்பு  கொண்டு இந்தக் கூத்தை எல்லாம் கேலி பேசுகிற புறக்கணிக்கிற பொல்லாப்புகளை செய்து ... 

இந்த பேனருக்கு பாலபிஷேகம் வார்க்கிற வகையறா மனிதர்களிடத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியுள்ளது.. !!

எது எப்படி ஆனபோதிலும், இந்தக் களேபரங்கள் எவையும் நின்று விடப் போவதில்லை என்பதை யாமறிவோம்.. 

அதே விதத்தில், என்னையொத்த சிலரது  கருத்துக்களும் மாறப் பெறுவதில்லை என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விழைகிறது  தன்மானம்.. !!
நன்றி..

Monday, January 25, 2016

கஞ்சன் டைரியில்..

முதற்கண் 
பிச்சை இடுபவர்கள் 
நிறுத்த வேண்டும்.. 
பிச்சைக் காரர்கள் 
தானாகக் காணாமல் 
போவார்கள்.. 
உழைக்கத் துவங்கி 
காசு சேர்ப்பார்கள்.. 

உழைத்து நாம் 
கொடுக்கிற காசு 
அவர்களை 
உழைக்காமல் 
சம்பாதிக்க வைக்கிறது..!

தானப் பிரபுவாக 
நம்மைத் தகுதி 
உயர்த்திக் காண்பிக்கிற 
காசு.. 
திருவோடு சேர்ந்ததும் 
நம்மை சபிக்கத் 
துவங்கும் ?..

'கோவில் உண்டியலில் 
சேர்ப்பான்' என்று 
கருதினாலோ ...

திருவோட்டில் சேர்த்து 
பிச்சைக்காரன் பீடியூத 
உதவுகிறானே!.. 

கவலை வேண்டாம் 
திருவோட்டுக் காசே.. 
பீடி விற்கிற 
பெட்டிக் கடைக்காரன் 
நிச்சயம் உன்னை 
உண்டியலில் சேர்ப்பான்...!!


Thursday, January 21, 2016

சுடும் நிழல்..

எனது நிழல்
உனது மார்பகப் 
பிராந்தியத்தில் 
விழுந்தமைக்காக 
அத்தனை சந்தோஷத்தில் 
அனாவசியமாக 
இருந்துவிட்டேன்.. !

உமது நிர்வாணத்தை 
சுலபத்தில் தரிசிக்கிற 
புருஷ வாய்ப்பு 
கிட்டுவது அரிது 
என்கிற 
அவநம்பிக்கையின் 
நிமித்தம் என்னில் 
பிறந்த கிறக்கமது ..!!

இத்தனைக்கும் 
எனது நிழல் என்பது 
அந்தி சூரியனின் 
வார்ப்பு.. 
அதனையும் முகில் 
அந்த ஷணத்தில் 
மறைத்திருக்கும் 
பட்சத்தில் - எமது 
நிழலுக்கு உமது  
மார்பகங்களில் 
படர சந்தர்ப்பம் 
அமைந்திருக்காது..!!

என்  நிழல் 
மீதான எனது 
பொறாமை 
எனக்கே என்னைக் 
கேவலமாக 
அடையாளப் படுத்திற்று.!!

பின்னொரு நாளில் 
நீ மார்பகப் புற்றில் 
அவதியுறும் 
தகவலறிந்து 
துடித்துப் போனேன்.. 

அதற்கான 
முழு சந்தேகமும் 
என்னுடைய நிழலின் 
மீது படியத் துவங்கிற்று 
அந்தத் தருணம் முதல்..!!

Wednesday, January 20, 2016

வண்ண வண்ண மனிதர்கள்..

Image result for VARIETY OF PEOPLE
பிரத்யேகமான ஏதோ ஒன்றில் நிபுணத்துவம் கொண்டிருப்பது ஒவ்வொரு மனிதனின் மகத்தான பிரஸ்டீஜ் இஷ்யூ..

சிலர் அனேக வித்தைகளிலும் கை தேர்ந்த சாமர்த்திய சாலிகளாக இருப்பதும் உண்டு.. அத்தனை ஐ-க்யூ இயல்பெனில் விட்டு விடுவோம்.. போற்றிப் புகழ்வோம்.
ஆனால், அவ்வித தன்மைக்கு நாம் முயல்வது என்பதும் அது கைவரப் பெறாமற் போயின் சுக்குநூறாக உடைந்து பொடி  தவிடாக உதிர்ந்து போவதென்பதும்  அநியாயம் மற்றும் அனாவசியம்.. !

நமக்கென்று வாய்த்திருக்கும் ஏதோ ஒன்றை செவ்வனே செய்து, அதிலே பரமானந்தமாக லயித்து .. புளகித்துப் போவதும், புறம் நின்று அதனைக் காண்பவர் வியக்கும் வகையில் ஆர்ப்பரிப்பதும் செம ஃபீல்.. 

சிலர் எந்நேரமும் வேலை அல்லது தொழில் முஸ்தீபில் இருப்பதையே விரும்புவர்.. ஓய்வைக் கூட ரகசியமாக்கி, பிறரிடம் தான் அப்படி எல்லாம் ரிலாக்ஸாக இருப்பதை விரும்புபவன் அல்ல என்பதைப் பறை சாற்றுவது கடமை போன்று  பிதற்றுவர்... இவரது அலுவல் சென்று சீக்ரட் விசிட் அடித்து  இவர் அமர்ந்திருக்கும் இருக்கையில் சற்றே ஒரு குஞ்சுத் தூக்கம் போடுவார் என்ற பட்சத்தில்.. நமது அரவம் நிமித்தம் விழிப்புத் தட்டி அண்ணன் செம டென்ஷன் ஆகி ஒரு மாதிரி மந்தகாசப் புன்னகை புரிந்து ... பிற்பாடு சாவகசமாக கோபிப்பார். 'வர்றேன்னு ஒரு போன் செஞ்சுட்டு வரத் தெரியாதா?' என்று கேட்பார்.. !

இன்னும் சிலர்.. சும்மா இருப்பர் .. நண்பர்களோ இன்னபிறரோ 'என்ன பண்றீங்க?' என்று கேட்டால், 'புதுசா எதாச்சும் படம் பார்த்தீங்களா?' என்று அவரையே கேட்பார்.. இவரது நேச்சர் புரியாத நபர்கள் இவரது தத்துபித்து கேள்விகளுக்கு  பதில் சொல்லத் துவங்குவர்.. 
புரிந்தவர்கள்.. இவரின் அசட்டுக் கேள்விகளுக்கு தக்க பதிலை உதிர்த்துவிட்டு  'இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க பாஸ்?' என்றொரு போடு போட்டால்.. 'உங்க கூட  பேசிட்டு இருக்கேன்' என்று ஹாஸ்யத்தில் பிரம்மாதக் கில்லாடி போன்று ஒரு கதறல் சிரிப்பொன்று சிரித்து வைப்பார்.. 
'அடே வெண்ணை.. சும்மாவே இருக்கியே.. வெட்கமா இல்லே?' என்று கேட்டாலே ஒழிய  இந்த நபர்களுக்கு சுரணை  பிறப்பது என்பது கடினம்.. ஆனால், இந்தப் பேமானிகளை அப்படி 'போட்டுடைப்பது' போன்று கேட்டு எவரும் வாங்கிக்  கட்டிக் கொள்ள தயாரில்லை என்பதால் நாசுக்காக ஏதேனும் சொல்லி  மூக்கறுப்பதும் , மானம் கெடுப்பதும் ரகசிய லட்சியமாக வைத்துக் கொண்டு  இவர்களை தெராட்டு வாங்கினால், அடுத்த நாள் எங்கேனும் வேலைக்கு செல்லும்  உத்தேசத்தில் ஒரு 2 அல்லது 3 நாட்களாவது இருப்பார்கள் என்பது உத்திரவாதம்.. ஹிஹி.. !  Image result for VARIETY OF PEOPLE

Wednesday, January 6, 2016

தொலைந்தவன் கவிதை..

அழகழகான 
எத்தனையோ 
வார்த்தைகள் .. மற்றும் 
அர்த்தங்கள் உள்ளன.. 

உன்னைக் குறித்து 
ஏதேனும் புனைய 
முனைகையில் 
எல்லாம் .. அவ்வித 
வார்த்தைகளும் 
அர்த்தங்களும் 
நான் தேடாமலே 
என்னை வந்தடையும்...!. 

ஆனால் எங்கு 
தேடினாலும் 
கிடைக்காத 
தொலைவிலும் 
முகவரி தெரியாத 
அநாமதேயத்திலும் 
தொலைந்து போயிருப்பது 
நீ தான்.. அல்லது 
உன்னை த் தொலைத்து 
விட்டு நிற்பது 
நான் தான்....!!

ஒருக்கால் 
நீ  என்னைத் 
தொலைத்து விட்டதாக 
உன் இருப்பிடத்திலிருந்து 
உணரும் பட்சத்தில் 
அதெனக்குத் 
தெரிய வரும் பட்சத்தில்.. 

-நிச்சயம் 
நானே எனக்கு 
அப்போது தான் 
கிடைப்பேன்..
!

Sunday, January 3, 2016

பசங்க-2

ந்தப் படம் குழந்தைகளின் மன நிலைகளை சித்தரிப்பது ஒருபுறம் இருப்பினும், பெற்றோரின் மனநிலைகளும் மையப் படுத்தப் பட்டிருக்கின்றன.. யதார்த்தமாக.. !
குழந்தைகளின் ஆசைகளை நம்பி மட்டுமே பலூன்கடைக் காரன் கடை போட முடியும்.. மற்றபடி பலூனுக்கு ரகளை செய்து பெற்றவர்களை இம்சித்து பலூன்காரன் கஜானாவை நிரப்புகிற திறன் அனைத்து குழந்தைகளுக்கும் சாசுவதம்.. 
மனசுக்குள் பலூன்காரனை திட்டி விட்டு, தம்மடிக்க உதிரியாய் வைத்திருந்த எல்லா சில்லறைகளையும் கப்பம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அடம்பிடிக்கிற அரக்கக் குழந்தைகளின் அனைத்து தந்தைமார்களுக்கும் தவிர்க்க சாத்யப் படாமற் போய் விடுகிறது.. 

இந்தப் படத்தினை தயாரித்த சூர்யா அப்படிப் பட்ட வியாக்யானமான பலூன்காரன்.. நிச்சயம் சூர்யா கஜானா நிரம்பிவிடும்.. ஆனால் இந்த பலூன்களை வாங்கிய பிற்பாடு, நாமும் குழந்தைகளோடு குழந்தைகளாக தட்டி விளையாடுகிற சுவாரஸ்யம் நிகழ்கிறது.. !
அடுத்து ஏதேனும் ரெண்டொரு மசாலாவில் நடித்து சொதப்பலாகி விட்டாலும் தாக்குப் பிடிக்க முடிகிற அளவுக்கு  சூர்யாவை இந்தப் படம் காப்பாற்றும் என்றே தோன்றுகிறது.. 

பாண்டிராஜின் கைவண்ணத்தில், பலூன்கள் சிறப்புற மேலெழுகின்றன.. குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி, வெடிக்காமல், காற்றுப் போகாமல் நன்கு மிதக்கின்றன.. 

இப்படி, ஹோல் சேல் வியாபாரி, ரீடெயில் வியாபாரி, அவைகளை கொள்முதல் செய்கிறவர்கள், வாங்கிப் பயன் பெறுகிற கன்ஸ்யூமர்கள் என்கிற அனைத்த தரப்பினரும் முழு மனநிறைவு பெற்று விடக் கூடும் இந்த பலூன்களைப்  பொறுத்த வரைக்கும்.. 

அடுத்த வேளை உணவு கேள்விக் குறியாகி விட்ட ஒரு நடுத்தர, ஏழை எளிய குடும்பங்களில்  கூட, குழந்தைகள் பெற்றோர் அன்றாடம் சந்திக்கிற யதார்த்த அவஸ்தைகளே இத்திரைப் படத்தில் செவ்வனே புனையப் பட்டுள்ள செய்தி.. ரேஷன் சோற்றையே கஞ்சி வடிக்க வேண்டி வந்தாலும் ... 
"என் பய்யன் பணக்காரங்க படிக்கிற பெரிய கான்வெண்டுல படிக்கிறானாக்கும் ...." என்று அரற்றி இன்பம் காண்கிற அற்ப கலாச்சாரம் .. பெரிய அனாசாரமாக  இன்றைய மக்களின்  மனோபாவங்களில் பெரும் பங்கு வகிக்கிறது.. 

"ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி ஜீவிக்கிற ஒரு கான்வெண்ட் மிஸ் கிட்ட தான்  தனது பிள்ளை பாடம் கற்க வேண்டும் .. நாற்பதாயிரம் ரூபாய் வாங்குகிற  கவர்மெண்ட் மிஸ் கிட்ட வேண்டாம்.. "
"நாற்பதாயிரம் சம்பளம் கிடைக்கிற கவர்மெண்டு வேலை தான் வேண்டும்.. ஐந்தாயிரம்  வாங்குகிற கான்வெண்ட் ஸ்கூல் வேண்டாம்"

மேற்சொன்ன இந்த இரண்டு வியாதிகளும் எங்கெங்கிலும் பீடித்திருக்கின்றன.. ஏய்ட்ஸ்-ஸும்  கேன்ஸரும்  கூட குணமாகி விடக் கூடிய வகையில் எதிர்காலத்தில் மருந்துகள் கண்டு பிடிக்கப் படலாம்.. ஆனால், அந்த மேற்சொன்ன வியாதிகள் குழியில் போட்டாலும் தீராது.. !! 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...