Thursday, March 31, 2016

ஒரு ஊர்ல..

தனாலோ அலகு 
உடைந்திருந்த காகம் 
ஒன்று.. பறக்கிற 
உத்தேசத்தைத் 
தள்ளிப் போட்டுவிட்டு 
வழிப் போக்கர்களின் 
உதவி நாடி நின்று 
கொண்டிருந்ததாக 
அதன் கேவல் உணர்த்திற்று.. 

மனித அரவம் கேட்டாலே 
சுளீரென்று பறந்து விடுகிற 
பறவை.. 
எவரேனும் புறங்கைகளால் 
கவ்வி.. அதன் 
மண்டை கழுத்துப் 
பிராந்தியங்களை 
வருடி விட்டால் தேவலாம் 
என்கிற பாவனையை 
எனது ஆறாம் அறிவு 
உணர்ந்தது.. 
Image result for crow catch
உணர்ந்ததை செய்கிற 
உன்னத ஆற்றல் 
அறவே அற்றவன் நான். 
ஆகவே அந்த 
அனுமானங்களினூடே 
கடக்கிறேன்.. 
திரும்பப் பார்க்கிறேன் மறுபடி.. 
'இத்தனை பாதாசாரிகளில் 
எமது நிலையை சரிவர 
உணர்ந்தவன் நீ ஒருவனே. 
நீயும் வெறுமனே 
வேடிக்கை பார்த்து விட்டு 
நகர்ந்தால் எப்படி?'
என்பதாகக் கரைந்தது 
அந்த பலவீனக் காகம். 

கோழி தூக்கவே 
முகம் சுழிக்கிற நான். 
திரும்ப சென்று அந்தக் 
காகம் தூக்கிக் கொண்டேன்.. 
மிருகவைத்தியரின் 
விலாசம் விசாரித்து 
அதன் அலகுக்கான 
மருத்துவத்தைத் துவக்கச் 
சொன்னேன்.. 

பாப்பாவுக்கு கிரைப் 
வாட்டர் வாங்க வைத்திருந்த 
காசை அதன் 
சிகிச்சைக்காக அளித்தேன்.. 

ஒரு நாயின் நன்றியுணர்வை 
முதன்முதலாக அந்த 
அலகிழந்து நிற்கிற 
காகத்தின் கண்களில் 
காணமுடிந்தது  
எமது ஆறாம் அறிவுக்கு.. !!

Tuesday, March 29, 2016

அவசரக் காதல்..


என்னை வழி மறிப்பது 
பேயெனிலும் நிற்பவன் 
நான்.. 
ஓர் அழகிய பெண் 
மறித்தால் ?

 எனது யமஹாவை 
உடனே ஓரங்கட்டினேன்.. 
வரவேண்டிய பேருந்து 
வரவில்லை என்றோ 
அவள் வரும் முன்னரே 
சென்று விட்டதாகவோ 
அவள் சொன்ன எவையும் 
எமது பிரக்ஞையில் 
நுழையக் காணோம்.. 

பில்லியனில் உடனடியாக'
வந்தமர வேண்டுமென்பதே 
எமது உடல் செல்களின் 
துரிதமேயன்றி 
மற்றவை யாவும் 
அற்றவையே.. !!

குண்டுகுழிகளில் 
ஸ்பீட் ப்ரேக்கர்களில் 
நான் அப்ளை 
செய்யவிருக்கும் 
அந்தப் பொன்னான 
பிரேக்கு-களுக்காக 
நீ தயாராகி விட்டாய் 
என்றுமது அருகாமை 
அறிவித்துவிட்டது பெண்ணே..

மிக சொற்ப கிலோமீட்டர்களே 
உமது இலக்கென்ற போதிலும் 
அவைகளை அடர்த்தி 
செய்வது என் மான்பன்றோ ?

உமது அவசரத்தை 
எனது தாமதம் .. 
மற்றும் எனது 
தாமதத்தை உமது 
அவசரம் ..
பரஸ்பரம் எதுவும் 
செய்வதற்கில்லை 
என்கிற போக்கில் 
நிகழ்ந்தது பிரயாணம்.. 

மறுபடி நம் 
தொடர்புக்கென 
மொபைல் எண்கள் 
பரிமாறப் பட்டாக வேண்டும்.. 
இரண்டாம் சந்திப்பை 
காதல் தளத்திற்குக் 
கொண்டு சேர்க்க வேண்டும்.. 

பிரதீப்பை பைக்
டாங்க்கின் மீதும் 
உறங்குகிற 
குட்டி லாவண்யாவை 
உனது  மடியில் வைத்தும்  
பிடித்துக் கொள்ள வேண்டும்.. 

'நால்வர் செல்ல சிரமம் மாப்பிள்ளே.. 
மகிழுந்துக்கு மாறுங்கள்'
என்கிற உன் தந்தையின் 
அன்பு வேண்டுகோள்.. 

"பஸ் மிஸ் ஆயிடித்து.. 
பைக்ல ஒரு பனாதி 
டிராப் பண்றான்.. வேணும்னே 
ஸ்லோவா ரைட் பண்றான்.. 
நான் எதுவும் சொல்றதுக்கு 
இல்லே.. இன்னைக்குக் 
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க 
ப்ளீஸ்.. "
என்கிற உமது கொஞ்சல் 
நல்ல வேளையாக என்னுடைய 
செவிப் புலன்களுக்கு
எட்டவில்லை..!
என்னுடைய .. 
நம்முடைய எதிர்காலம் 
குறித்த ஆழ்ந்த 
சிந்தனைகளின் நிமித்தம்.. !!

Sunday, March 27, 2016

புதைகுழிப் பிராந்தியங்கள்.

Arundhati-backview-mallu-actress
நீ 
அற்ற இந்தப் 
பிராந்தியத்தின் 
வெறுமை .. 
கற்பனை செய்வதற்கே 
கொடியதாக இருக்கிறது.. 

இப்போது தான் 
இந்தப் பிராந்தியமே 
நிம்மதிப் பெருமூச்சு 
விடுகிறது.. 

அதிகாலை மார்கழியாய் 
புரிபடுகிறது.. 
கோடையின் வெம்மை..!

கங்கையாய் நனைக்கிறது.. 
கானல் சிற்றலைகள் ..!!

நீ எழுந்து போய் 
விடக்கூடாதென்று 
பிரார்த்தனை செய்கிறது 
இந்தப் பிராந்தியம். 

உன்னை உள்வாங்கிக் 
கொள்கிற புதைகுழிகள் 
உருவாகக் கூடுமோ 
என்று அரற்றத் 
துவங்கிற்று மனது.. 


எதற்கிந்தப் பதற்றம் 
என்றுன் கண்கள் 
திரும்பிக் கேட்கின்றன 
என்னை.. 

பிராந்திய வில்லன் 
குறித்த எமது 
ஆற்றாமையை விளித்தேன் .. 

புதைகுழிக்குள் 
நீ வர மறுப்பாயோ 
என்னோடு? 
என்று நீ 
கேட்ட போது தான் 
'அட.. அதானே'
என்று அமைதியானது 
என் மனது.. !!


Friday, March 25, 2016

முடி.

சீவி சிங்காரிக்கத் தோதாக ஒரு பிராயத்தில்  அடர்ந்து படர்ந்திருந்த தலைமுடி மற்றொரு பிராயம் தரிக்கையில் உதிர்ந்து காணாமல் தலையை சொட்டையாக்கி .. நரைத்து .. என்கிற ரீதியில் ஒரு மனிதனை எவ்வளவு கேவலப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அடாத கேவலத்தை அவன் சாகும் வரைக்குமாக உடனிருந்து பொறுப்பாக செய்து முடிக்கிறது கேசம்.. 

நரை விலக கருஞ்சாயங்கள் .. சில தோல்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி சொறி சிரங்கு போன்ற ரணகளம் நிகழ்த்தி விடுகின்றன சில சாயங்கள்.. முடிபோச்சே என்கிற கவலை விலகி.. மூஞ்சியே போச்சே என்கிற பெருங்கவலை தொற்றி .. நடைபிணமாக நேர்கிறது சிலருக்கு.. 

சாயம் பொருந்திப் போகிற சில நரைமுடியாளர்களுக்கு சற்றே பந்தா காலங்களை புதுப்பித்துக்  கொள்ள முடிகிறது.. 
இன்னும் சிலரோ சாயத்தையே சவுரி போன்று கருதி தவிர்த்து அந்த சுண்ணாம்புத் தலையோடே சுழன்று வரத் துணிகின்றனர்.. 

தொடு உணர்வற்ற நமது அவயவத்தின் முடிகளும் நகங்களும்  நம்முடைய அலங்காரப் பிரக்ஞையின் நெருங்கிய வஸ்துக்களாக படைக்கப் பெற்றிருப்பது  ஒரு விபரீத ஆச்சர்யத்தை உணரத் தான் முடிகிறது சற்றே யோசிக்கையில்..!!


Wednesday, March 16, 2016

இனி வரும் நாட்களில் ??

என்னைக் 
கண்டு
குதூகலமாகப்
புன்னகைக்கிற
உன்னுடைய
குழந்தையை நீ
ஏன் மிரட்டலாகப்
பார்த்துக் கண்டிக்கிறாய்?

ஓடோடி வந்து
உன்னிடம் வாங்கி
அதனைக் கொஞ்சத்
துடிக்கும் எனது
ஆசையை நான்
துவம்சம் செய்ய
வேண்டியுள்ளது..

உன்னையும் குழந்தையையும்
மவுனமாகக் கடந்து
நடையிடுகிறேன்..
அதன் புன்னகை
என்னைத் திரும்பிப்
பார்க்கத் தூண்டுகிறது..
ஆனால் நீ
உன்னைப் பார்க்கத்
திரும்புவதாக
தப்பர்த்தம் கொள்வாய்..

அடுத்த நாள்..
அழும் உன் குழந்தைக்கு
உணவு புகட்டிக்
கொண்டிருந்தாய்..
கடக்கிற என்னை
"அங்கிள் பாரு"
என்று விரல் நீட்டி
உணவைத் திணிக்கிறாய்..
அதுவும் அழுகை
மறந்து என்னைப்
பார்த்து உணவைப் 
பெற்றுக் கொள்கிறது.. 

மறுபடி நான்
நகர்ந்து விடும் பட்சத்தில்
அடுத்த வாய் உணவை
மறுதலித்து விடுமோ
என்று பயந்து
அங்கேயே சற்று
நின்று விடுகிறேன்..

மறுநாள்..
இன்னும் குழந்தை
தூங்கி எழவில்லை
போலும்..
நீ மட்டுமே
நின்றவண்ணம்
இருக்கிறாய்....

உன் குழந்தையின்
அந்த முதல் நாள்
புன்னகையை
உன்னிடமும் கண்டு
பதிலுக்கு நானும்
புன்னகைத்து
சிலிர்த்துக் கடக்க
நேர்கிறது..

மேற்கொண்டு
நடப்பது பிடிபடாமல்
அப்படியே மண்ணில்
புதையுண்டு போக
அல்லது காற்றில்
கரைந்து போக
ஏங்கியது மனது..

குழந்தையுள்ள
உனக்குக் கணவனும்
இருப்பான் என்கிற
அறிவு .. கள்ளக்
காதல் செய்யத் துணிகிற
களவாணிகளுக்கு
அறவே அற்றுப்
போய் விடும் போலும்.. !!

Sunday, March 13, 2016

கா..கா.. கா..

சுத்த சைவமாக இருந்து 
தொன்னூற்று மூன்றில் 
உயிர் நீத்த திரு.ரமண சேஷாத்திரி
அவர்களின் 16ஆம் நாள் சடங்கிற்கு 
அவர் விரும்பி உண்ணும் 
டிபன் ஐட்டமான கோதுமை உப்மா 
சப்பாத்தி குருமா .. மற்றும் 
பூசணித் தயிர் அவியல் 
வெண்டைப் புளி குழம்பு 
நெய்ப்பருப்பு மிளகுரசம் 
கெட்டித் தயிர் .. 
வகையறாக்களை வக்கணையாக 
வாழை இலையில் பரிமாறி 
சேஷாத்திரியை மிக சுலபத்தில் 
காக்காய் வடிவில் எதிர்பார்த்து 
வந்து எடுத்துண்ண 
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 
சொந்தபந்தம் என்று 20 பேர்கள் 
எதிர்பார்த்துக் கிடக்க.. 

"அப்பாடா" என்கிற 
உறவினர் பெருமூச்சோடு 
வந்திறங்கியது காகம்.. 
மன்னிக்கவும்-- சேஷாத்ரி..!

அதற்குள்ளாக 
அண்டையில் உள்ள 
ராவுத்தர் வீட்டில் 
உண்டுவிட்டு கழுவி ஊற்றிய 
உணவில் தென்பட்ட 
எலும்புத் துண்டொன்று 
ரமண சேஷாத்திரியை ..
மன்னிக்கவும் -- காக்கையை 
அவசர கதியில் அங்கே 
இழுத்தது.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...