Tuesday, August 30, 2016

முகநூலதிகாரம் ..

Image result for facebook imagesமுன்னொரு காலத்தில் பரஸ்பர நட்பை நிர்ணயித்தவை கடிதங்களாக . இருந்தன... கல்யாணம் திருவிழாக்கள் என்று நிகழ்கையில் சந்தித்து அளவளாவி நெடு நேரம் உரையாடி .. போன.. வந்த கதைகளை சளைக்காமல் பிதற்றி,  விடை பெறுகையில் மனமில்லாமல் பிரிவது என்று இருந்தன.. மறுபடி கடிதங்களிட்டு விஷயங்களை பரிமாற ஆளாளுக்கு துரிதப் படுத்திக்கொள்ளப் பட்டன...!

பிற்பாடு டெலிபோன் வந்தது.. விரல் நுழைத்து சுழற்றி சுழற்றி .. ஒரு எண்ணை தவறுதலாக சுழற்ற நேர்ந்தாலும் மறுபடி முதலில் இருந்து.. 
பிறகு பட்டன் போன்.. அதிகம் ஒரு எண்ணை அழுத்த நேர்ந்தாலும் அதனை க்ளியர் செய்து விடுவது, மறுமுனையில் பிஸி என்றால் சில நொடி இடைவெளிக்குப் பிறகு ரீடையல் செய்வது.. 

மொபைல் வந்து.. தொடுதிரை வந்து ... மனதில் நினைத்தாலே அழைக்க வேண்டிய நபரின் செல் சிணுங்கும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி கண்டுள்ளது.. Image result for facebook images

இவைகள் அனைத்தையும் விட சக்தி வாய்ந்ததாக "முகநூல்" இன்றைய தேதியில் மாறி விட்டது என்பதில் எவர்க்கும் எள்ளளவு மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை..  

என்றோ விடுபட்ட நண்பர்கள் .. எதற்கோ சண்டையிட்டு வருடங்கள் பல பேச்சு வார்த்தைகளற்று இருந்த எதிரிகள்.. என்று பட்டியலிட்டு எல்லா வகையறா மனிதர்களும் சுலப சங்கமமாக வித்திட்டிருக்கிறது பேஸ்புக் என்கிற விஷயம். 
Image result for facebook images
எந்த  செய்தியின் நிமித்தம் கணினியை திறக்க வாய்த்தாலும், முதற்கண் நமது கண்களும் விரல்களும் மேய முற்படுவன , அந்த நீலநிற பின்புலத்தில் அமைந்துள்ள சின்ன "f " தான்.. 
யாதொருவருக்கும் வயது பாகுபாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கிற அன்றாட கணினி சடங்கு இதுவெனில் "மிகையன்று".. 

டெலிபோன், மொபைல், மின்னஞ்சல், இன்னபிற கடிதங்கள் என அனைத்த தொடர்புகளுக்கான ஊடகங்களையும்  பின்னுக்குத் தள்ளிய பெருமை இதனையே சாரும்.. !! 
Image result for facebook images
"எனக்கு இன்னொரு முகம் இருக்கு" என்று இந்த முகநூல் சொல்வதை  சற்றே அலச முனைவோம்.. 
வழக்கமாக லைக் வைக்கிற நண்பன் எதுவுமற்று இருப்பானாயின் இடுகை இட்டவன் இதயம் வெம்பிப் புடைப்பதை சொல்லியாக வேண்டும்.. 
ஆழ்ந்து கவனித்தால், அவனுடைய ஏதாவது பதிவினை இவன் கண்டிருக்க மாட்டான்.. அல்லது கண்டும் காணாதிருப்பான்.. 
ஆனால் இவனொன்றைப் புனைந்து பதிவிட்டதை மட்டும் அவன் கவனிக்க வேண்டுமென்று வெறி கொள்வான்.. 

மற்றொருவன் பகிர்ந்துள்ள விஷயம் கவைக்குதவாததாக  இருப்பினும்,நட்பின் நிமித்தம் மரியாதையின் நிமித்தம், ஒரு கமெண்ட்டோ, குறைந்த பட்சம் ஒரு லைக்கோ கொடுத்தாலே அன்றி, உமக்கு முகநூல் கோதாவில் இடமில்லை.. 
அரண்மனையில் வீற்றிருக்கும் ராஜாக்களுக்கான மரியாதையில் உள்ளனர் பேஸ்புக்கில் சிலர், பலர்.. 
அதே பேஸ்புக்கில் அனாதை விடுதியில் இருப்பவர்கள் போன்றும் பலர் உள்ளனர் என்பதனை குறிப்பிட்டாக வேண்டும்.. !!

நட்புக்கென்று ஒரு அதிகாரத்தை ஒதுக்கி நயம்பட உரைத்த வள்ளுவன் இந்தக் கால கட்டத்தில் இருக்க நேர்ந்தாலும் கூட, நிச்சயம் முகநூலுக்கென்று ஒரு அதிகாரத்தை ஒதுக்கியே தீரவேண்டும்.. !!Image result for facebook images

Sunday, August 21, 2016

இறுகி விட்டதடி....!

தட்டூசியால்
முத்த நூல் கோர்த்து 
என் கிழிந்த 
காதலைத் தைக்க 
வந்த தையல் நீ.. 

கிழித்தது நீ என்கிற 
குற்ற உணர்வில் தான் 
தைக்கவும் வந்தாயோ?

மேற்கொண்டு பிய்ந்து 
போகிற சாத்யங்களற்று 
உமது தையல் கெட்டிப்
பட்டிருக்கிறது.. 

இற்றுதிர்ந்து போய் 
விடுமோ என்றிருந்த 
எம் காதல் இப்போது 
இறுகி விட்டதடி.. 

காறி உமிழ்கையில் 
அசூயை கொள்ளச் செய்கிற 
உதட்டெச்சில்---
முத்தப் பரிமாறல்களாக 
பரிணமிக்கையில் 
அமிர்தமெனத் திரிந்து விடுவது 
காதல் அமிலத்தின் 
மர்ம ரசாயன மாற்றமென்று
கொள்வோமாக.. !!

Wednesday, August 17, 2016

முரண்களின் ராஜ்ஜியம்..

முரண்களினூடே 
இயங்கப் பெறுகிறது 
வாழ்க்கை.. 
யாதொரு ப்ரத்யேகத் 
தன்மையிலுமாக 
நிலைத்திருப்பதற்கான 
சாத்தியக் கூறுகளற்ற 
குழப்பங்களைப் பற்றிக் கொண்டே 
நீள்கிறது காலம்.. !

பற்றற்றிருப்பதற்கான லாவகம் 
பிடிபட்ட தெளிவில் இருக்கையிலேயே 
பொருள்கள் மீதான 
பேராவல் பீறிடுகிறது.. 

மௌனத்தை மய்யப் படுத்த 
முனைகையிலேயே
ஏதேனும் முணுமுணுக்க 
வாய் பிரயத்தனிக்கிறது.. 

வேசி வீட்டு பூஜையறையில் 
வருகிற பக்தி 
கோவிலில் அவளைப்
பார்த்துவிட நேர்ந்த போது
வராமல் மறுதலித்து விட்டது.. !

மரணத்திற்கு எதிர்மறையான 
இந்த வாழ்க்கை.. 
மரணத்துடன் ஒப்பிடுகிற
தகுதியையே இழந்து 
நிற்பதாகத் தோன்றுகிறது.. 

மரணம் தெளிவானது .. 
குழப்பமற்றது.. 

புதைப்பதா எரிப்பதா 
என்கிற முரண்பட்ட 
சடங்குகளுக்குரிய குழப்பங்கள் 
வாழ்பவர்களின் பிரச்சினை மட்டுமே.. !

Monday, August 8, 2016

காதலிக்கத் தெரியாதவன் எழுதிய கவிதை..


காதல் வயதைக் கடந்து.. 
காதலற்ற வாழ்வைக் கடந்து.. 
'காதலற்ற' எனில் 
'பரஸ்பர காதலற்ற'... !

ஓராயிரம் ஒருதலைக் காதல்களில் 
தோற்ற சுகானுபவங்கள் 
குவிந்து கிடக்கின்றன என்னுள்.. 

எதிரினத்தை நம்மைக் காதலிக்க 
வைக்கிற நாசுக்குத் தெரியாத 
நபரின் சோம்பேறி த் தனம் தான் 
இந்த ஒருதலைக் காதல் என்பது...!

ஓர் ஆண் தெரு சொறி நாய் கூட 
அன்றாடம் குளித்து மொசுமொசுவென்று 
பங்களாவுக்குள் வலம் வருகிற 
பெட்டை நாயை சரி செய்வது 
சாத்யத்தில் இருக்க.. 
--பெண்ணை அணுகும் சாதுர்யம் புரியாத 
புண்ணாக்காக நான் மட்டுமே 
காதலிக்கிறேனாம்.. கட்டுக் கட்டாய்க்
கவிதை புனைந்து கிழிக்கிறேனாம்.. 
என் காதல் தோல்விக் கவிதை புத்தகம்
நான்கு தாண்டி ஐந்தாம் பதிப்புக்கு 
எகிறுகிறதாம்.. !!

பெட்டி  க் கடையை மளிகை க் கடையாக 
மாற்றி.. அதையே டிப்பார்ட்மெண்ட் ஸ்டோராக
மாற்றி .. மொபெட் போய், பைக் போய், கார் 
என்று உச்சம் போகிற நச்சென்ற மனிதர்கள் 
நிரம்பிய சமூகத்தில் ... 
பெட்டிக் கடையே கடனில் மூழ்கி 
சரக்குப் போட்டவர்கள் காறித்துப்புவது 
தான் கையாலாகாத ஒருதலைக் காதல் என்பது.. !

மனதையும் உடலையும் மாண்போடு வைத்திருந்தால் 
காதலிக்க வயதேது ? மண்ணேது ?
கூனிக் குறுகிய குற்ற உணர்வுகளும் .. 
திறந்துவைக்க முனைந்தாலும் 
தாழிடத் தவிக்கிற தாழ்வு மனப்பான்மைகளும் 
ஒருதலைக் காதலை ஒய்யார நடைபயில செய்வன.. 

இன்றும் நான் கடக்கிற சாலைகளில் 
நான் நடைப் பயிற்சி புரிகிற பூங்காக்களில் என்று 
காதலில்  திளைக்கிற ஜோடிகள் பார்க்கையில் 
அந்தப் பரஸ்பர அனுபவமற்ற எமது 
தனிமைப் பட்ட காதல் விக்கிச் சாக விழைகிறது...!

காதலிக்குக் காத்திருக்கையில் புரியாத கொசுக்கடி .. 
காதலி வந்ததும் பேசிக் கொண்டிருக்கையில் புரியாத கொசுக்கடி .. 
ஒருதலைக் காதலில் கடிக்கிற கொசுவை அடிப்பதே வேலை என்றாகி.. 
--நாட்கள் கடந்து.. 
மனைவியோடு உரையாடுகையில் கொசுக்கடி இல்லை.. கொசுவே இல்லை.. .. ஆயினும் --
எங்கெங்கிலும் அரிப்பெடுக்கிற உணர்வை ... 
உண்மையாக அரிக்கவில்லை.. ஆனால் அம்மாதிரியான 
உணர்வை ஏனோ தவிர்ப்பதற்கில்லை.. !! ??.. 

Monday, August 1, 2016

இன்று துவங்கிய காதல்.

ளைப்பாறல் 
என்பதை உமது 
மடி  எனக்கு இன்று 
அறிமுகப் படுத்திற்று ..

உன்னைக் கனவில் 
காண்பதற்காக விரும்பி 
உறங்கிய இரவுகள் 
நேற்றோடு விடைபெற்றன.. 

உறங்கியும் நீ அற்ற 
வேறு கனவுகளால் 
எமதுறக்கம் நோய்வாய்ப்
பட்டதாகவே தோன்றிற்று..!

ஓரிரவில் கடும் காய்ச்சலெனக்கு..
ஆனால் அன்றைய கனவில் 
நீ வந்ததும் காணாமற் 
போயிற்றென் காய்ச்சல்...

நீ கிடைக்கப் போராடிய 
அந்தக் காலகட்ட
மலரும் நினைவுகள் என்பன 
இன்று நீ கிட்டியதற்கு 
ஒப்பானவையே.. 

பின்னொரு நாளில் 
எதற்கேனும் நிகழவுள்ள 
நம்முடைய  மனஸ்தாபங்களை 
அனுமானிக்க முடிகிற 
என்னுடைய 
தீர்க்க தரிசனங்களை 
அபசகுணமாக சித்தரிக்க 
முயல்கின்ற உன்னுடைய 
இந்த க்ஷண  காதல் என்பது..
என்னுடைய அனைத்த 
தருணங்களை விடவும் 
முக்கியத் துவம் வாய்ந்தது.. !!
Image result for boy lover on the lap of a girl lover

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...