
என்பதை உமது
மடி எனக்கு இன்று
அறிமுகப் படுத்திற்று ..
உன்னைக் கனவில்
காண்பதற்காக விரும்பி
உறங்கிய இரவுகள்
நேற்றோடு விடைபெற்றன..
உறங்கியும் நீ அற்ற
வேறு கனவுகளால்
எமதுறக்கம் நோய்வாய்ப்
பட்டதாகவே தோன்றிற்று..!
.
ஓரிரவில் கடும் காய்ச்சலெனக்கு..
ஆனால் அன்றைய கனவில்
நீ வந்ததும் காணாமற்
போயிற்றென் காய்ச்சல்...
நீ கிடைக்கப் போராடிய
அந்தக் காலகட்ட
மலரும் நினைவுகள் என்பன
இன்று நீ கிட்டியதற்கு
ஒப்பானவையே..
பின்னொரு நாளில்
எதற்கேனும் நிகழவுள்ள
நம்முடைய மனஸ்தாபங்களை
அனுமானிக்க முடிகிற
என்னுடைய
தீர்க்க தரிசனங்களை
அபசகுணமாக சித்தரிக்க
முயல்கின்ற உன்னுடைய
இந்த க்ஷண காதல் என்பது..
என்னுடைய அனைத்த
தருணங்களை விடவும்
முக்கியத் துவம் வாய்ந்தது.. !!
No comments:
Post a Comment