Monday, May 31, 2010

Indonesian baby on 40 cigarettes a day

கடவுளுக்கு சங்கடம்....

பிறவி
அறுக்கச்சொல்லிய
என் சென்ற பிறவியின்
முறையீடும் அதற்கான
இறைவனின் ஒப்புதலும்
இந்தப் பிறவியிலும் கூட
எனக்கு ஞாபகம் இருக்கிறது..

மறுபடியுமான என்
இப்பிறப்பு குறித்து
இறைவனுக்கே குற்ற உணர்வு
போலும்.. ,
என்னை நாஸ்திகனாக்கி
கோவிலுக்குள்ளேயே
வராமலிருக்க செய்து விட்டான்..!

ஆனபோதிலும் இன்றைய
நவீனங்களை தரிசிக்கிற
அற்புத சந்தர்ப்பங்களை வழங்கவே
எனக்கு அவன் இந்தப்
பிறப்பை மறுபடி
நிர்ணயித்திருப்பதாக அனுமானித்து
நன்றி தெரிவிக்க
-என் நாத்திக தன்மையை ஒழித்து-
கோவில் புக நேர்ந்தது.. 

திரை போட்டிருந்தார்கள்....

இன்னும் இறைவன்
தர்மசங்கடத்தில் இருப்பதாகவே
தோன்றியது எனக்கு..!!


சுந்தரவடிவேலு...         [இது சிறு கற்பனையே.. ஆஸ்திகர்கள் பொறுத்து அருள்வார்களாக]

Saturday, May 29, 2010

நாம் சுயநலமிகள்...

பெருவாரியான மனிதர்களுக்கு பிறர்க்கு உதவி புரிகிற போக்கே சற்றும் இல்லை என்பது மிகவும் வருத்தமும் கேவலமும் நிரம்பிய ஓர் தன்மை என்றே சொல்வேன்..
மிகவும் சுயநலமாய் இருப்பதை பெரிய லாபமாக கருதத்துவங்கி விட்டார்கள்... உதவுவதையே சங்கடமாயும் நஷ்டமாயும் உணர்கிறார்கள்... தனக்கு ஒரு பிரச்சினை வருகிற போது மாத்திரம் பிறரின் உதவிகளை எதிர்பார்க்கவும், கேட்டுப்பெறவும் துணிகிறார்களே தவிர, பிறரது பிரச்னைகளை தூசாக மதித்து மறைந்து விடுகிறார்கள்...
பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டவன் மேற்கொண்டு என்ன ஆவான் என்கிற கற்பனைகளுக்குகூட  மனசில் இடம் கொடுக்காமல் அவர்களுடைய சந்தோஷங்களுக்கான பிரயத்தனங்களில் மூழ்கி விடுகிற கொடூர தன்மைகளுக்கு இலக்காகி விடுகிறார்கள் மனிதர்கள்....

சென்ற வாரம் ஒரு நாள் நான் கோத்தகிரி செல்ல நேர்ந்து திரும்ப நேர்கையில் நான் பயணித்து வந்த பேருந்து பின் சக்கரம் பஞ்சராகி நின்று போனது..சேட்டுப்பெட்டை என்ற இடத்தில்... கீழே விரைகிற எல்லா வாகனங்களும் தவித்து நிற்கிற எங்களைப்பார்த்து ஹோ ஹோ வென்று கத்திக்கதறி ஆர்ப்பரித்து கிண்டலடித்து விட்டுத்தான் செல்கிறார்களே தவிர கொஞ்சம் சில சில பேர்களாக ஏற்றி அடிவாரம் சேர்க்கலாம் என்கிற எண்ணம் எவர் வசமும் இல்லை...
மற்றொரு பஸ்ஸில் ஏற்றி விடலாம் என்கிற கண்டக்டரின் முயற்சிகள் கூட தோற்ற வண்ணம் தான் இருந்தன.. எல்லா பஸ்களும் நிரம்பி வழிந்தும் , டீலாவில் விழுந்து விடுவது போலவும் தான் வந்து கொண்டிருந்தன... அது போக உள்ளிருக்கிற பயணிகளும் நிற்காமல் போகச்சொல்கிறார்கள்...
கடைசியில் ஓர் ஜல்லி லாரி காலியாக வரவே, சிலர் லிப்ட் கேட்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.. இன்னும் சிலர் என்ன ஆனார்கள் எப்படி வந்து சேரப்போகிறார்கள் என்கிற கவலையோ பயமோ எங்களுக்குக்கூட இல்லை..
அப்போது தான் யோசித்தேன்... தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் எல்லா மனிதர்களுக்குள்ளும் அடியாழத்தில் சுயநலம் தான் ஆணிவேராக இருந்து எல்லாரையும் இயக்கி வருகிறதென்று..!!

இந்தத்தன்மையில் இருந்து விலகி  சில ஞானிகளும் பெரிய உள்ளமும் கொண்ட மாமனிதர்களும் விரல் விட்டு எண்ணும் அளவு இருக்கலாம்... ஆனால் அநேகம் மனிதர்கள் மிகவும் கேவலமான மன அமைப்பில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை ..


சுந்தரவடிவேலு..             

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...