Monday, May 31, 2010

கடவுளுக்கு சங்கடம்....

பிறவி
அறுக்கச்சொல்லிய
என் சென்ற பிறவியின்
முறையீடும் அதற்கான
இறைவனின் ஒப்புதலும்
இந்தப் பிறவியிலும் கூட
எனக்கு ஞாபகம் இருக்கிறது..

மறுபடியுமான என்
இப்பிறப்பு குறித்து
இறைவனுக்கே குற்ற உணர்வு
போலும்.. ,
என்னை நாஸ்திகனாக்கி
கோவிலுக்குள்ளேயே
வராமலிருக்க செய்து விட்டான்..!

ஆனபோதிலும் இன்றைய
நவீனங்களை தரிசிக்கிற
அற்புத சந்தர்ப்பங்களை வழங்கவே
எனக்கு அவன் இந்தப்
பிறப்பை மறுபடி
நிர்ணயித்திருப்பதாக அனுமானித்து
நன்றி தெரிவிக்க
-என் நாத்திக தன்மையை ஒழித்து-
கோவில் புக நேர்ந்தது.. 

திரை போட்டிருந்தார்கள்....

இன்னும் இறைவன்
தர்மசங்கடத்தில் இருப்பதாகவே
தோன்றியது எனக்கு..!!


சுந்தரவடிவேலு...         [இது சிறு கற்பனையே.. ஆஸ்திகர்கள் பொறுத்து அருள்வார்களாக]

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...