Thursday, March 29, 2012

கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்..


...

எங்கெங்கிலும்
வியாபித்திருக்கிற
வெறுமை குறித்த
பிரக்ஞை எவர்க்குமில்லை...

-வீரியமில்லாத
பிரச்னைகள் குறித்து
மிகவும் குவிக்கப்
பட்டுள்ளன எல்லாரது
இதயங்களும்...

கவனிக்கப் படாத
அடர்ந்த இருளினூடே
கிஞ்சிற்று சிதறிக்
கிடக்கிற வெளிச்சம்
குறித்து அதீத கவனம்
எல்லாருக்கும்...


மௌனங்கள் கேட்பாரற்றும்
உளறல்கள் மட்டுமே
கவனிக்கப் பட்டும்...
வெற்றுத்தாள்
கண்டுகொள்ளப் படாமல்
கிறுக்கல்கள் மட்டுமே
ஈர்க்கப் பட்டும்...

இப்படியாக
வாழ்க்கை மொத்தமும்
இல்லாதது போல
என்றுமிருக்கிற
எதையும் எவரும்
கவனம் கொள்ளாமல்....

-என்றைக்கும்
இருப்பதாக நினைத்து
கவனிக்கிற எதுவும்
நிலைக்கப் போவதில்லை
என்கிற பிரக்ஞை
எவருக்குமில்லை...                         


சுந்தரவடிவேலு 

Monday, March 19, 2012

ஓர் சபலிஷ்டின் நடைப் பயிற்சி..



அதிகாலை...
வெளிச்சம் வர
இன்னும் சில
நிமிடங்கள்...
எனது நடைப்
பயிற்சி..வழக்கமாகத்
தெருச் சந்துகளில்...

மனம் போன போக்கில்
கால்கள்...
வீட்டின் பக்கம்
ஓர் ஹை ஸ்கூல்
மைதானம் ஹோவென்று
இருந்த போதிலும்..
-தெருக்களில்
நடை போடுகிற
ஆனந்தம் அலாதி..

அந்த ஹை ஸ்கூல்
அலுத்துப் போனதற்குக்
காரணம்-- சுற்றி சுற்றி
அதையே சுற்றியாக
வேண்டிய அறுவை உணர்வு..
அதையும் தாண்டி
என்றேனும் ஹை ஸ்கூல்
மைதானம் சற்று
சுவாரஸ்யப் படுவதுமுண்டு..
ஏனென்று ஆய்ந்து பார்க்கையில்
எவரேனும் தனது
தொப்பை பெருத்த மனைவியை
இழுத்துக் கொண்டு வந்திருக்கக்
கூடும்.. !!

ஆனால் அதைக்
காட்டிலுமாக ஓர் கிறக்கம்
தன் வாசல்களில்
நீர் தெளிக்கிற, கோலமிடுகிற
பெண்டிர் மீது...
குனிந்து அவர்கள் கோலங்களில்
லயித்திருக்கையில்
என் துரிதநடை தளர்வடையும்...!
அவர்களின் கோலத்தில்
நான் லயித்திருப்பேன்
என்கிற பொய்யை நீங்கள்
நம்பி விடவா போகிறீர்கள்??

இப்படி பல வீதிகள்..
சேலை தென்படாத வீதிகள்
எவ்வளவு நேர்த்தியாக
உள்ளபோதிலும் --
அவைகளில் நான்
நடப்பதில்லை...

துவைப்பதற்கென்று
வெளியே போடப்
பட்டுள்ள சரிவான கற்கள்...
அதே சரிவோடு பெண்கள்..
என்னைப் பார்த்ததும்
மாராப்பை அத்தனை
அவசரமாக சீர்ப்
படுத்துவதைப் பார்த்தால்
"நாம் மட்டும் தான்
ராமனில்லையோ"
என்கிற சந்தேகம் பீறிடும்...

பெண்கள் பாவம்..
தன் அதிகாலைக் கடன்களை
செவ்வனே மெனக்கெட்டு
நிறைவேற்றிக் கொண்டிருக்கையில்
--என் போன்ற 
தடிமாடுகள் .. வாக்கிங் போகிறோம்
என்கிற போர்வையில் 
கண்களால் கற்பழித்துக்
கொண்டிருக்கிறோம்..??



நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...