Monday, July 30, 2012

பேதம் ......


பல தருணங்களில்
அவ்வப்போது என்னைக்
காப்பாற்றிய கடவுள்களின்
பட்டியல் .. மற்றும்
அவ்வப்போது என்
கால்களை வாரிய
கடவுள்களின் பட்டியல்
என எல்லா வகையறா 
பட்டியல்களும்
மனப்பாடம் எனக்கு
எல்.கே.ஜி. ரைம்ஸ் போல..!              

காப்பாற்றிய
பட்டியலில் உள்ள
அரசமரப் பிள்ளையார்,
கால்களை வாரிய
பட்டியலிலும்
இருக்கிறார்
தங்கக் கிரீடம்
சூட்டிய ராஜ விநாயகராக..
அதே தெருவில்..!!

Saturday, July 28, 2012

சிதறல்கள்

பிளாகில் earnings என்ற ஓர் தளத்தில் தமிழில் பிளாக் எழுதுகிற நபர்களுக்கு ஒவ்வாத ஒன்றாக அறிவித்திருப்பது தமிழையும் தமிழில் எழுதுகிறவர்களையும் கேவலப் படுத்துவது போல உணரத் தோன்றுகிறது...

அதற்கென்று eligible ஆக சில மொழிகள் உள்ளன.. அவை மாத்திரமே விளம்பரங்களை  ஓரத்தில் அனுமதிக்கச் செய்து earnings பண்ண முடியும்.. என்ன கொடும சார் இது?..

இதற்கெல்லாம் போராடுகிற கூட்டம் இல்லையா?.. ஆனால் யாரிடம் இதற்கெல்லாம் கூப்பாடு போடுவது?.. எப்படி கொடி  தூக்குவது..? ஹசாரே மாதிரி உண்ணாவிரதம் இருக்க நான் தயார்.. ஆனால் எப்படி எங்கே?

இதற்காக இனி இங்கிலீஷில் எழுதியா கிழிக்க முடியும்??..

ரியாதில் இருந்து புது டெல்லி வந்திருக்கிறார் ஒரு நபர்... எவ்வித விசாவோ , பிற பயண டாக்குமேண்டோ எதுவுமற்று... நம்ம இந்தியன் ஐர்லைன்சில் ..

நல்ல வேலையாக வந்து இறங்கிய பிறகாவது கண்டு பிடித்தார்கள் என்பது இந்திய சாதனை... அதையும் நழுவ விட்டிருந்தால் அண்ணன் ஜாலியாக சுற்றி அடித்து விட்டு ரிட்டன் டிக்கட் கூட எடுத்திருப்பார்...

"இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று விமான உயரதிகாரிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.."hefty penalty போட வேண்டும் " என்று அரற்றுகிறார்கள்... இவர்களது புலம்பல் மிகுந்த எரிச்சலை உண்டு பண்ணுகிறது...

என்னைக் கேட்டால் இவர்களுக்குத் தான் பெனால்டி போட வேண்டும்.. இத்தனை தடைகளைத் தாண்டி தில்லாக வந்திருக்கிற அந்த நபரின் களவாணித் தனத்தை ஒரு வகையாக ரசிக்கக் கூட முடிகிறது... ஆனால் இவர்களது அஜாக்கிரதையை நினைக்கையில் பத்திக் கொண்டு வருகிறது...
"mentally challenged " என்று ஓர் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் . நம்ம ஊழியர்கள் தான் mentally challenged  ஆகத் தோன்றுகிறது எனக்கு ...

நம்ம தமிழ்நாட்டில் ஒரு பனாதிப் பயல் செஞ்ச காரியம் மனசை உலுக்குகிறது... தனது மனைவி ரெண்டாவதும் பெண்ணாகவே பெற்றெடுத்த காரணத்தால் அன்றாடம் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்ததில் ரத்தவாந்தி எடுத்து அந்தப் பெண்மணி இறந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது... இந்த வழுக்குவால் பேமானிக்கெல்லாம் எதுக்குப் பொண்டாட்டி புள்ளை ?.. எங்காவது போயி கெணத்துல உழுந்து சாக வேண்டியது தானே?..


Monday, July 23, 2012

என்ன தலைப்பு வைப்பது??

கம்ப்யூட்டர் எனது உபயோகத்திற்கு வந்து நான்காவது வருடம் ஆகிறது என்ற போதிலும், இன்னும் அதன் நுண்ணிய மற்றும் அதன் அடர்த்திகள் எனக்கு இன்னும் ஓர் அந்நியத் தன்மையோடு இருந்து வருவது வியப்பா வியப்பில்லையா என்பதே புரியவில்லை...

வாழ்க்கை நெடுக பல விஷயங்கள் இவ்வாறு தான் நம்மோடு இருந்தவாறு இல்லாமலும் ,இல்லாமல் இருந்தவாறும் ஓர் வினோதமான முரணோடு சமப்பட்டவாறு பயணித்து வந்து கொண்டிருக்கிறது...

உடனிருக்கிற மனைவி கூட இப்படித்தான் புரிந்தும் புரியாமல் எனது வாழ்வில் ஓர் பங்களிப்பாக இருக்கிறாள் என்றாலும்... இந்த கணினி என்கிற உபகரணம் புரிபடாமல் வருகிற ஓர் தவிப்போ ஓர் குழப்பமோ ஓர் கவலையோ கூட மனைவியைப் புரியாமல் வாழ்ந்து வருகிற இந்த வாழ்வு மீது இல்லாதது ஓர் வரப்பிரசாதமா அல்லது சபிக்கப் பட்ட ஓர் தன்மையா என்பதே கேள்வியாக உள்ளது...

இப்படித்தான் சுட்டுவிரலைக் காட்டி எதுவும் புரிபடவில்லை என்கிற குற்றச்சாட்டினை முன்வைக்க மாத்திரம் நாம் எல்லாரும் எதிலும் அவசரப்பட்டு விடுகிறோமே யன்றி .. நாம் நமக்கு எந்த அளவுக்குப் புரிபட்டிருக்கிறோம்  என்கிற ஓர் மிகப் பெரிய கேள்வியினைக் கேட்க நமக்கெல்லாம் தோன்றுவதேயில்லை என்பது பெருவியப்பு... இல்லையா??

சரி விடுங்கள்.. இந்தப் புரியாத விஷயங்களை அலசுவோமேயானால் தீர்வற்று போய்க்கொண்டே இருக்கும்...

கணினியைக் கண்டுபிடித்தவர்களும், அதுபோக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல புதிய  கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்கிற பிரஜைகளும் நம் போன்ற மனிதர்கள் தானே?... ஒவ்வொரு உபகரணமும், அது சார்ந்த ஒவ்வொரு அன்றாட புதுப்பிப்புகளும் , i  mean  updates .. நிகழ்ந்த வண்ணமே தானே உள்ளது?..

இவர்களெல்லாம் என்ன ரகம் ?.. புரியவில்லை என்கிற சங்கதி புரியாதவர்களா??.. தெரியவில்லை என்கிற வார்த்தையை அகராதியில் இருந்து அகற்றியவர்களா?

தெரியாமல் இருப்பதும், , உடனே மறந்து விடுவதும் மிகவும் யதார்த்தமான மிகவும் பெரும்பான்மையான  ஓர் மனோபாவமாகப் படிந்து விட்டது இங்கே... கண்டுபிடிப்பதும்  கவனம் பிசகாமல் சம்பவங்களைக் கையாள்வதும் செயற்கை தன்மை போலவும்  பொழுதைப் போக்க வேடிக்கை பார்க்கிற விஷயங்களாகவும்  இங்கே இருப்பது ஓர் "இசிவடைந்த சமுதாயத்தை" மட்டுமே அடையாளப்  படுத்துகிற விதமாக உணரத் தோன்றுகிறது...

இந்தத் தன்மை ஓர் தளத்திலாவது வெட்கமாக வேதனையாக உணரப்பட வேண்டும்... நாமும் இந்த சமுதாயத்திற்கு முடிந்த வரை ஓர் பிரத்யேகமான சேவையை ஆற்ற வேண்டும் என்கிற தாகம் இயற்கையாகவே தொனிக்கவேண்டும்...

முதற்கண் இயற்கையை நேசிக்கக் கற்க வேண்டும்... வீட்டில் மாத்திரம் அல்லாது வீதியிலும்  சுகாதாரம் குறித்த பிரக்ஞை மேலோங்க வேண்டும்... எல்லா அசிங்கங்களையும் முடிந்த வரை நாமே செய்து விட்டு அவை அகலவேண்டும், அவைகளை அகற்ற அரசாங்கம் மெனக்கெட வேண்டும் என்று  போராட முனைகிறோம்...

மனைவியோ கணினியோ புரியாமல் போவது கேவலமல்ல... இந்த சமுதாய மேம்பாட்டிற்காக ஓர் சிறு அடியைக் கூட எடுத்துவைக்காத ஓர் தன்மை தான் மிகவும் கேவலமாகும்...
 

Tuesday, July 17, 2012

பில்லா சகுனி கூட்டங்கள்..

இப்பெல்லாம் டுபாக்கூறுப் படங்களுக்கெல்லாம் கூட செமத்தியா ரசிகர்கள் பில்ட் அப் கொடுத்து அலப்பறை செஞ்சர்றாங்க...

உதாரணத்துக்கு சமீபத்துல ரிலீஸ் ஆன சகுனியும் சரி, பில்லா ரெண்டும் சரி.. என்ன பண்ணாலும் பருப்பே வேகாத படங்கள் போலும்.. ஆனா அந்த நடிகர்களோட ரசிகர்கள் செஞ்ச பாலாபிஷேகத்தயும் படாடோபத்தையும் பார்த்தா என்னவோ அந்தப் படம் சில்வர் ஜூ பிலியும் கோல்டன் ஜூபிலியும்  கொண்டாடுன மாதிரி சும்மா அந்தத் தூக்கு தூக்கறாங்க..

சினிமா காரங்க ஒருபக்கம் இந்த அப்பாவிப் பொதுசனங்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்கன்னு பார்த்தா ரசிகர்கள் ஏமாத்துறது அதுக்கு மேல இருக்கு..
கொழந்தைகளோட அடத்தை நம்பி பொம்மை பிசினஸ் செய்யறவன் பொழச்சுக்கறது  போல, இந்தப் பொறுப்பில்லாத ரசிகர்களால, இதுல சுலபமா மயங்கற  பொதுமக்களால, முக்கியமா அவுங்களோட அரைடிக்கட் பசங்க பிள்ளைங்களால  இவனுக கல்லா கலகட்ரதப் பார்த்தா நமக்குப் படா டென்ஷன் ஆகிடுது நைனா...

ரீமேக் பண்ற படங்களைக் கூட ஒழுங்கா பண்ணாம இவனுக இஷ்டத்துக்குப் பண்ணிப்புட்டு அப்புறம் பாக்ஸ் ஆபீஸ்ல ஊத்திக்கிச்சு, சரியா போவலை அப்டி இப்டின்னு எலிப்பொறில மாட்ன  எலி போல மூஞ்சிய வச்சுக்கினு திரிய வேண்டியது...

இவனுக பண்ற கூத்தை கூட நம்பாம இவனுக ரசிகர்கள் அளப்பரயில மயங்கி ஓபனிங் ஷோ , பஸ்ட் நாளு பஸ்ட்  காட்சின்னு அஞ்சு ரூபா கொடுத்துப் பார்க்க யோகியதை இல்லாத சப்பை மேட்டர்  படங்களுக்கெல்லாம் ஐநூறு ஆயிரம்னு கப்பம் கட்டி பெருமூச்சு உடறோம்... அல்லது மூர்சையே ஆயிடறோம்...

ஒருதடவை அடிபட்ட நாயி, அப்புறம் "தப்பிச்சோம், பொழச்ச்சமொடா சாமி... இனி இந்த ஏரியாவுல தல வச்சு படுக்கரதில்லை"ன்னு வீரசபதம் ஒன்னை விவேகமா எடுத்துட்டுப் போனா அவன் மனுஷன்... அப்டி இல்லாம மறுபடி மறுபடி இந்தப் பாலாபிஷேகத்துல வந்து கலந்துக்கிட்டு சிக்கிச் சீரழிஞ்சிக்கிட்டே இருக்கணும்னு தலை எழுத்து போல... ஒவ்வொரு புதுப் பட ரிலீச்ளையும் வந்து தலைய உட்டு மாட்டிக்கினு அப்புறம் "கியோ கியோ" ன்னு கோழிக்குஞ்சு மாதிரி கதற வேண்டியது...

படத்தைப் பார்த்துட்டு ஆசையா ஹோடெல்ல போயி ரெண்டு இட்லி திங்கக் கூட சில்லறைய  விடறதில்லை இவனுக... ஆனா நம்ம இளிச்சவா தனத்தை வச்சு இவனுக ஒரு பெரிய காக் டைலே செலிபிரேட்  பண்றாங்கறது தான் கொடுமையான உண்மை இங்கே... முடிஞ்சா புரிஞ்சுக்கங்க...

Monday, July 9, 2012

படைப்பாளிகள் பரஸ்பரம்....


!

பிரம்மனைத் 
தத்ரூபமாகக் கல்லில் 
சமைத்துக் 
கொணர்ந்தமைக்காக 
அந்த ஸ்தபதி 
மிக உயரிய 
விருதுகளுக்காகப் 
பரிந்துரைக்கப் பட்டார்...


--அவர் , தன்னால் 
பிறவி ஊனமாகச் 
சமைக்கப் பெற்றமைக்காக 
நிச்சயம் 
பிரம்மா 
கசிந்திருக்கக் கூடும்...
கல்லாயிருந்த 
போதிலும்....!!



Wednesday, July 4, 2012

காதல் மயக்கம்...


எனக்கு இர

உன்னைப் பார்க்க 
நேர்கையில் எல்லாம் 
என் கவிதை ஈக்கள் 
மொய்க்கத் .துவங்குகின்றன..


தேன்  கொண்ட பூ நீ 
என்கிற அறிவு 
என் கவிதைகளுக்கு 
எப்போதும்...


விரட்டுவது போன்ற 
பாவனையோடு 
மயங்கி விழுகிறது 
என்னில் உனது முகம்...


நீ விரட்டியடித்தாலும் 
உன்னில் சரணாகதி 
அடைவதை மட்டுமே 
நோக்கமாக நான் 
.வைத்துள்ளேன்...


அப்படியிருக்க 
என்னில் நீ மயங்கி 
விழுகையிலோ 
உன்னை உள்வாங்குவதில் 
என்ன சிரமம் 
இருக்கப் போகிறது???

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...