Monday, July 9, 2012

படைப்பாளிகள் பரஸ்பரம்....


!

பிரம்மனைத் 
தத்ரூபமாகக் கல்லில் 
சமைத்துக் 
கொணர்ந்தமைக்காக 
அந்த ஸ்தபதி 
மிக உயரிய 
விருதுகளுக்காகப் 
பரிந்துரைக்கப் பட்டார்...


--அவர் , தன்னால் 
பிறவி ஊனமாகச் 
சமைக்கப் பெற்றமைக்காக 
நிச்சயம் 
பிரம்மா 
கசிந்திருக்கக் கூடும்...
கல்லாயிருந்த 
போதிலும்....!!



No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...