Sunday, April 24, 2011

சாய்பாபாவின் ஆத்மா...

தன் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கே உதவ யோசித்தும், யோசித்து மறுத்தும் வருகிற மனோபாவத்தில் வாழ்ந்து வருகிற சிறுமை நிரம்பியவர்கள் நாம்... 

ஆனால், சமூக சேவைகளை தனது உயிர்மூச்சாக சுவாசித்து வாழ்ந்து வந்த சத்ய சாய்பாபா அவர்கள் இப்பூவுலகை விட்டு சென்று விட்டார் என்பது மனவேதனைகளையும் தாங்கொணா துயர்களையும் மனசில் பதிய வைத்து விட்டது என்பதில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை..

இப்படி ஓர் லக்ஷ்ய புருஷன் இனி இந்தப்பூ உலகிற்கு கிடைப்பாரா என்பது துயர் நிரம்பிய கேள்வியாகும்... ஏதேனும் பம்மாத்து பண்ணி , அந்த இருக்கையில் மற்றொரு நபர் அமரக்கூடும்...நான் தான் சாய்பாபாவின் மறுபிறவி என்று ஓர் டுபாக்கூர் விடக்கூடும், அதனை செல்லுபடி கூட செய்துவிடுவார்கள்..

ஆனால் அந்த நபர் இவர் போல ஓர் கருணை வள்ளலாக இருப்பாரா, மக்கள் சேவையில் திளைப்பாரா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்... 

சுயநலம் மாத்திரமே எங்கெங்கிலும் ஏகோபித்து படர்ந்து கிடக்கிற இந்தப்ப்ரபஞ்சத்தில் , தயாள சிந்தனைகள் கடுகளவு கூட எவர் வசமும் துளிர்ப்பதில்லை என்பதோடு, அவ்விதம் சாதிப்பவர்களைக்கூட தடுத்து நிறுத்தி சாதிப்பவர்கள் தான் இந்த எதார்த்த உலகில் இருந்து வருகின்றனர்..

சாய்பாபா போலவே பிறர்க்கு கொடுத்து உதவும் மனப்பாங்கும், அதனை வழி நடத்தவும் இனி நபர்கள் முளைக்க வேண்டுமானால், அது அந்த சாய் பாபாவின் ஆத்மா மாத்திரமே செயல் படுத்தக்கூடிய ஒன்றென்றே தோன்றுகிறது...

சாய்பாபாவின் ஆத்மா...

Monday, April 18, 2011

எண்ணுதல் நல்லது வேண்டும்...

வாழ்க்கை மாயை என்கிற பிரக்ஞை அதீதம் பேர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை... சகலமும் சாஸ்வதம் என்கிற தன்னம்பிக்கைகளை வரவேற்போம்... ஆனால் ஐநூறு ஆண்டுகள் வாழ்வோம் என்பதான தன்மையில் மிகப்பலரும் , இந்த வாழ்க்கை குறித்தும் அதனை அனுபவிப்பது குறித்தும் பகீரதப் பிரயத்தனங்களோடு செயல் படுவதை பார்த்தால், பெரிய ஹாஸ்யமாகவும் அதே சமயத்தில் சற்று எரிச்சலாகவும் கூட உணர நேர்கிறது..

தானும் தன சந்ததிகளும் எந்த சிரமங்களும் அற்று இந்த உலக வாழ்வை உன்னதமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து விட வேண்டும் என்கிற வேட்கை தான் பலரிடம் காணப்படுகிறதே அன்றி, மற்ற சம்பந்தமில்லாத நபர்களும் அதே தன்மையில் லயிக்க வேண்டும் என்கிற ஆசைகளோ ஆர்வங்களோ எவர்வசமும் உள்ளதாக நினைக்க முடியவில்லை... 

பொது நலம் குறித்தும், பிறரும் ஆனந்தம் அடைய வேண்டும் என்கிற மேலான எண்ணங்களும்  ஓர் மனிதனுக்கு இயல்பாக வளர்வதே அந்த சமுதாயம் நாகரீகமாகவும் ஆரோக்யமாகவும் வாழ்வதற்கான சாத்யக்கூறுகள் கொண்டவை என்பது மறுக்க முடியாத உண்மை...

அதுவன்றி தன் மகனும் பேரனும் மாத்திரமே சொகுசு கார்களில் பவனி வரவேண்டும் என்றும், பக்கத்து வீட்டுக்காரன் பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கொண்டு போக வேண்டும் என்று கருதுவது கேவலமான மற்றும் சகிக்கவொண்ணா மனோபாவம் ஆகும்...

தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்கிற மேலான போக்கு காணப்பட வேண்டும்... தன் கக்கூஸை மாத்திரம் டைல்ஸ் ஒட்டி அழகு பார்க்கிற மனசு, பொதுக் கக்கூஸில், பெண்குறி குறித்த ஆபாச சித்திரங்களை வரைந்தும் , படிப்பவர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் விளக்கங்கள் தந்தும் கொண்டாடி கூத்தடிப்பது பொறுக்கித்தனத்தின் உச்சம் மற்றும் தண்டனைக்கு உரிய போக்கும் ஆகும்...


Wednesday, April 13, 2011

தேர்தல் குறித்து.....

வரலாறு காணாத மாற்றங்களுடன் இந்த முறை தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்திருக்கிறது.... சுவற்றில் கிறுக்கி , மற்றும் சுவரொட்டிகளை நிரப்பி பொது மக்களின் சுவர்களை நாசப்படுத்துகிற எந்த வேலைகளும் அற்று மிகவும் நாகரீகமாகவும் , நாசுக்காகவும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது..

இனி வரவிருக்கிற எதிர்காலத்தேர்தல்களும் இதே முறைகளை பின்பற்றி பொது மக்களையும், அவர்களின் சுவர்களையும் சேதப்படுத்தாத வகையிலேயே இருக்கும் என்பது திண்ணம்...

எந்தக்கட்சி சின்னங்களையும் வெளிக்கொணராமல் , வேட்பாளர்களே கூட மெளனமாக வந்து போக வேண்டிய சூழல்களை உருவாக்கி சாதித்திருக்கிற தேர்தல் கமிஷனுக்கு பெரிய பாராட்டு...

முந்தைய தேர்தல்கள் நடந்த விதங்களையும் இன்றைய நடைமுறைகளையும் ஒப்பிடுகையில் பெருவாரியான ப்ரம்மிப்புகளும் ஆச்சர்யங்களும் மேலோங்குகின்றன... எந்த வாய் வார்த்தைகளும் கூட அற்று மௌனமான , மென்மையான முறையிலே நடந்து முடிந்திருக்கிற இந்தத்தேர்தல் , ஓர் இலக்கியத்தரம் வாய்ந்த கவிதை போல எல்லாரது மனசுகளிலும் பதிந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை...

இதே மாதிரியாக எந்த பந்தாக்களும் அற்று , மாநிலத்தை ஆளுகிற அரசாங்கமும் நாகரீகங்களையும் நாசுக்குகளையும் கையாண்டால் , மக்களிடம் பெரும் பாராட்டை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை...ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடனே அதிகார தோரணைகளை காட்டுவதிலும் , எதிர் கட்சிகளைப்பழி வாங்குவதிலுமே குறிக்கோளுடன் செயல்படுகிற கேவலமான போக்குகள் தொலைந்து , நாட்டு மக்களுக்கு அவசியமானவற்றை செயல்படுத்துகிற திராணி மட்டும் கொண்டிருந்தால் அது ஓர் ஆரோக்ய மான போக்காகும்.. சென்ற ஆட்சியின் அசிங்கங்களை பறை சாற்றிக்கொண்டு , நடக்க வேண்டிய நல்லவைகளை தள்ளிப்போடுகிற தன்மைகளை விட்டொழித்து விட்டு , மக்களுக்கு நன்மை பயக்கிற விஷயங்களை பிரதானமாக மேற்கொண்டு செயல்படுவதே உயர்ந்த தன்மையாகும்....

எந்தக்கட்சி ஆட்சி அமைத்தாலும் இதே போக்கில் செயல்பட்டால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர்...எதிர் கட்சிகள் அநாகரீகமாக பேசியும், சண்டையிட்டும் வம்புக்கு இழுத்தாலும் கூட , ஆளுகிற கட்சி அதனை அலட்சியம் செய்து மக்கள் நலன்களில் மாத்திரமே முழு அக்கறைகளை செலுத்தும் பட்சத்தில் , எதிர் கட்சிகளே கூட வாயடைத்துப்போகும் என்பதில் ஐயமில்லை...


வி. சுந்தரவடிவேலு....                 

Friday, April 8, 2011

தீராததும் ஆறாததும்....

எதையாவது எழுதலாமென்று அமர்கிற போதெல்லாம் உன்னைக்குறித்தே தான் என் சிந்தனைகள் படர்கின்றன என்னையுமறியாமல...
உன்னை மறக்க நினைத்தே.. நினைத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது...

--எந்த வகையிலும் பொருந்திப்போகாத என் காதலை .. காதல் என்கிற புனிதத்வம் பொதிந்த வார்த்தையில் குறிப்பிடுவது  அவ்வளவு பொருத்தமானதாக தெரியவில்லை...

--ஏனெனில் ஒரு கால் நீயும் என்னைக்காதலிப்பதாக தெரியப்படுத்தி இருந்தாலுமே கூட அதற்கான எனது ஆளுமை வீரியம் நிரம்பியதாக இருந்திருக்கக் கூடுமா என்பது கேள்விகளும் சந்தேகங்களும் கொண்டவையே...

--என் காதலைக்கூட உன் வசம் நான் திணிக்க வேண்டும் என்கிற எவ்வித பிரயத்தனங்களையும் மேற்கொண்டவன் இல்லை..என் தன்மையை காதல் என்கிற அடையாளமாக நீ புரிந்து கொண்டிருக்க மாட்டாயென்று கூட நான் அனுமானிக்கிறேன்..
-அது ஓர் இனம் புரியாத வீச்சு.., காதலையும் தாண்டிய புனிதத்வமான உணர்வது...அந்த உணர்வினை நிரப்புவது, வார்த்தைகளுக்கு சாத்யப்படாது என்பதோடு, அவ்வித ஓர் உணர்வினை சாதாரண தன்மையில் இருக்கிற எவரும் விளங்கிக்கொள்வது அசாத்தியம் ..

--என் தன்மையில் , அதாவது அந்த உணர்வின் தன்மையில் நீயே  இருந்திருந்தாலும் கூட .. அதனை  நான் அடையாளம் கண்டிருப்பேனா என்பது சந்தேகம் தான்... நானுமே கூட சாதாரண தன்மை கொண்டவன் தான்...

--எனது அந்த உணர்வின் ரகசிய  வீச்சு மாத்திரமே .....
எனது தன்மையை தாண்டிய கதியில் என் வசம் ஒளிந்தும் ஒளிர்ந்தும் கொண்டிருக்கிறது...

சுந்தரவடிவேலு..               

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...