Monday, April 18, 2011

எண்ணுதல் நல்லது வேண்டும்...

வாழ்க்கை மாயை என்கிற பிரக்ஞை அதீதம் பேர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை... சகலமும் சாஸ்வதம் என்கிற தன்னம்பிக்கைகளை வரவேற்போம்... ஆனால் ஐநூறு ஆண்டுகள் வாழ்வோம் என்பதான தன்மையில் மிகப்பலரும் , இந்த வாழ்க்கை குறித்தும் அதனை அனுபவிப்பது குறித்தும் பகீரதப் பிரயத்தனங்களோடு செயல் படுவதை பார்த்தால், பெரிய ஹாஸ்யமாகவும் அதே சமயத்தில் சற்று எரிச்சலாகவும் கூட உணர நேர்கிறது..

தானும் தன சந்ததிகளும் எந்த சிரமங்களும் அற்று இந்த உலக வாழ்வை உன்னதமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து விட வேண்டும் என்கிற வேட்கை தான் பலரிடம் காணப்படுகிறதே அன்றி, மற்ற சம்பந்தமில்லாத நபர்களும் அதே தன்மையில் லயிக்க வேண்டும் என்கிற ஆசைகளோ ஆர்வங்களோ எவர்வசமும் உள்ளதாக நினைக்க முடியவில்லை... 

பொது நலம் குறித்தும், பிறரும் ஆனந்தம் அடைய வேண்டும் என்கிற மேலான எண்ணங்களும்  ஓர் மனிதனுக்கு இயல்பாக வளர்வதே அந்த சமுதாயம் நாகரீகமாகவும் ஆரோக்யமாகவும் வாழ்வதற்கான சாத்யக்கூறுகள் கொண்டவை என்பது மறுக்க முடியாத உண்மை...

அதுவன்றி தன் மகனும் பேரனும் மாத்திரமே சொகுசு கார்களில் பவனி வரவேண்டும் என்றும், பக்கத்து வீட்டுக்காரன் பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கொண்டு போக வேண்டும் என்று கருதுவது கேவலமான மற்றும் சகிக்கவொண்ணா மனோபாவம் ஆகும்...

தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்கிற மேலான போக்கு காணப்பட வேண்டும்... தன் கக்கூஸை மாத்திரம் டைல்ஸ் ஒட்டி அழகு பார்க்கிற மனசு, பொதுக் கக்கூஸில், பெண்குறி குறித்த ஆபாச சித்திரங்களை வரைந்தும் , படிப்பவர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் விளக்கங்கள் தந்தும் கொண்டாடி கூத்தடிப்பது பொறுக்கித்தனத்தின் உச்சம் மற்றும் தண்டனைக்கு உரிய போக்கும் ஆகும்...


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...