Tuesday, August 25, 2015

ஜாலியோ ஜிம்கானா..

70th Anniversary of La Tomatina

க்காளி மாதிரி தங்கமும் தூக்கி வாரி அடித்து விளையாட நேர்ந்தால்?
வாவ்.. கற்பனையே கம்பீரமாக இருக்கோல்லியோன்னோ ?
அதுசரி, தங்கமும் இந்த மாதிரி வந்துச்சுன்னா அப்றமா வேற எதைத் தான் வேல்யூ உள்ளதா வச்சுக்கறதாம் ??
இப்ப குப்பையா கெடக்கற ஜல்லிக் கல்லு பத்தாக்குறையா மாறி, கிராம் 3000 ன்னு மாறிடப் போறதா யோசிங்கோ.. 
காதுல கையில கழுத்துல நெத்தியில இடுப்புல ன்னு எங்க பார்த்தாலும் டிஸைன் டிஸைனா கருங்கல் ஜல்லி பளீர்னு மின்னாமப் போயிடுமா என்னா ?

"குமரன்  ஜல்லி ஸ்டோர்ஸ்".. "ஜாய் ஆலுக்காஸ் ஜல்லி மாளிகை"  "கல்யாண் ஜல்லீஸ்" 

'கல் டிசைன் நல்லா இருக்கா?'
'சூப்பர்.. இதே மாதிரி நானும் வெங்கச்சான் கல்லுல செஞ்சு  போடலாம்னு இருக்கேன்.. '
'ஐயோ அது இன்னும் ரேட் கூட வருமே டி? 
'வரட்டும்.. இந்தக் கஸ்மாலம் செஞ்சு போடட்டும்.. பக்கத்து வீட்டு பரமேஷ் , எதுத்தாப்புல இருக்கற விக்கி இவுங்க எல்லாம் பித்தளைல பைக் வாங்கி ஓட்டறாங்க. இந்த தரித்திரம் இன்னும் தங்க சைக்கிளையே வச்சுக்கிட்டு நம்ம  மானத்த வாங்குது.. போதாக் குறைக்கு ஹெட் லைட்டை வைரத்துல செஞ்சு போட்டிருக்கு.. எவ்வளவோ சொன்னேன், அதையாச்சும் கண்ணாடியில மாட்டுங்கன்னு.. சொன்னா கேட்டா தானே?'

'எங்க ஆத்துகாரர் இரும்புல எதாச்சும் செஞ்சுக்கறையா கண்ணு ன்னு ஆசையா கேக்கறாரு.. '

'ஐயோ ஐயோ.. நீ கொடுத்து வச்சவா .. இந்த சனியனைக் கட்டிக்கிட்டு இன்னும்  நான் பிளாட்டினத் தட்டு வாங்கி தான் பிச்சை எடுக்கணும்.. '

ஹிஹி.. 

Monday, August 17, 2015

ரகசிய அலறல்கள்..

றியாமையின் சுவடுகள் அனைவரின் வசமும் பத்திரமாக நிறைவு வரைக்குமாக பயணம் செய்யும் அவர்களோடு...!
 பகுத்தறிவுகளும் மன முதிர்ச்சிகளும் ஓரிழையில் நுழைந்து விடுமெனிலும் அந்த அறியாமையின் மழலைமை நம்மில் தவழ்ந்த வண்ணமே ஒருவகை சுவாரஸ்யம் நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கக் கூடும்.. !

சில விஷயங்கள் இன்னும்  உருவமாக, இன்னபிறவாக நம்மோடு இருக்கும்.. சில விஷயங்களோ, பொருள் தன்மை இழந்து இதயத்துள் நினைவாக வியாபித்து வீற்றிருக்கக் கூடும்..

என்னிடம் பொருள் சார்ந்து நிறைய அறியாமைகள் குவிந்து கிடக்கின்றன.. ஆம், எமது இளம்பிராயம் தொட்டே, எதனையேனும் கவிதை என்றும், கதை என்றும், கட்டுரை என்றும் நான் மெனக்கெட்டுப் புனைந்தவை எல்லாம் .. அன்றைய எமது "அறியாமை" என்கிற மலரும் நினைவுகளாகத் திரண்டு கிடக்கின்றன இன்று..

இன்றைக்கு முளைத்திருக்கிற சிறு அறிவொன்று அவைகளை ரகசியமாக கேலி செய்து ஒரு நமட்டுச் சிரிப்பை உதடுகளில் உதிர்க்கச் செய்கின்றன..

ஆனால் மிக வியப்பாக அந்தப் பிராயங்களிலுமே கூட இன்றைய ஆழ்ந்த சிந்தனைகளுக்கு ஒப்பாக சிலவற்றை சிந்தித்து நான் எழுதி இருப்பது என்னைப் பொருத்தமட்டில்  உலகின் ஏழு அதிசயங்களோடு இணையப் பெறுகிற தகுதி கொண்டவையே..

அன்றைக்கு இருந்த என் அறிவு கூட இத்தனை நம்பிக்கைகளோடும்  அகந்தைகளோடும் இருந்ததில்லை என்று இன்று அனுமானிக்க முடிகிறது.. கனமான ஒன்றைக் கூட மிக யதார்த்தமாக , போகிற போக்கில் சொல்ல முடிந்திருக்கிறது என்னால்... 
ஆனால், இன்றோ எதையேனும் சற்றே ஆழ்ந்து சொல்லவோ எழுதவோ  நேர்ந்து விட்டால் போதும்.. என்னவோ, மகாகவி எனக்கும்  கீழே நின்றாக வேண்டும் என்று கூக்குரலிடுகிறது எமது போலி கவுரவம்.. 

இன்றைக்கென்னவோ நான் மிகவும் அங்கீகரிக்கப் பட்ட பிரபல எழுத்தாளனாக  உலா வருவது போன்ற மாயையை எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டு விட்டேனோ என்று தோன்றுகிறது.. 

'அன்னைக்கு ஒரு வார்த்தை இன்னைக்கு வேற ஒரு வார்த்தை.. ' என்கிற பாகுபாடுகள் எனக்கு உடன்பாடில்லாதது .. ஆகவே அன்று எவ்வண்ணம்  கனவுகள் குவித்த வண்ணம் எதையேனும் சிறுபிள்ளைத் தனமாக கற்பிதம் செய்து கொண்டு திரிந்தேனோ, அதே மனநிலை, சூழ்நிலை கொண்டு தான் இன்றளவும் எனது 'எழுத்தாளன் கனவு' மிளிர்ந்த வண்ணமே உள்ளது.. 

ஆனால் இளமை அன்று எனக்குள் ஒரு எதிர்கால வேட்கையை மிக அடர்த்தியாக செருகி வைத்திருந்தது.... ஆனால், கால நழுவலில் யாவும் நீர்த்து கானலாகி ... இன்றைய அடர்த்தியான அறிவு, 'ஏதோ இந்த அளவுக்கு ஆச்சே!' என்கிற சமாதான சமாதியை ஏற்படுத்தி உயிரோடு புதையுண்டு போகிற ஆற்றல்களும் பொறுமைகளும் பெற்றிருப்பது  பரம ஆச்சர்யம் நிகழ்த்துபவை.. !!

Thursday, August 13, 2015

உடலுயிர்..

உள்வீசும் 
உயிர்க்காற்றில்... 
இலை என 
அசைகிறது 
உடல்....!
Image result for LEAVES
உயிர் ஊற்றில் 
கடல் எனத் 
ததும்பும் உடல்..
Image result for SEA
பிறகு 
உயிர்க் கிளி 
பறந்ததும் 
பழுத்த இலை 
என உதிரும் 
உடல்..!!
Image result for LEAVES

Tuesday, August 4, 2015

தயவு செய்து யாரும் என்னை எழுப்பி விடாதீர்கள்..

உன்னிடம்
தொலைவதிலுள்ள
சுவாரஸ்யம்
எனக்கு நான்
கிடைப்பதில்
இருப்பதில்லை.. !

தனிமைப் பட்டுக்
கிடப்பதாக
எனக்கு நானே
வதந்தி பரப்பிக்
கொண்டிருந்தேன்..
உமது தோளில்
தலை சாய்க்கும்
திட்டங்களோடு..!!

அடங்கா மிருகம்
என்றொரு அடையாளம்
எனக்குண்டு..
ஆனால்
உன் மடி வந்து
சேர்கிறேன்
மொசு மொசு முயல்குட்டியாய்.. !

என் தலை
வருடுமுன் விரல்கள்
பிடித்துச்  சொடுக்கப் பார்க்கிறேன்..
அதற்குள்ளாக
நித்திரைக்குள்
மூழ்கச் செய்து
மூர்ச்சையாக்குகிறாய்..!!

நீ தந்த துயில் கலைக்க
எவர்க்கும் உரிமை இல்லை..
நீயே விழிக்கவும் வை..

Monday, August 3, 2015

இது தாண்டா வாழ்க்கை..

இது தாண்டா வாழ்க்கை.. 
இந்தப் புகைப்படம் பார்க்கையில் இப்படிக் கதறுகிறது மனது.. . ஹிஹி.
Menschen in China, dem bevölkerungsreichsten Land der Erde - noch

1000 கிலோ முரண்கள்..

எந்த மனிதனை 
சிருஷ்டிக்கவும் 
கடுகளவு கல்லைக் 
கூடப் பிரயோகிக்கவில்லை 
கடவுள்.. 

ஆனால் 
கற்களை மட்டுமே 
கொண்டு 
கடவுள் சிருஷ்டிக்கப் 
படுகிறார் 
மனிதனால்..!!

ஐயோ.. வுட்டுட்டமே...!

பாச இணையதள முடக்கம்,துவிலக்குப் போராட்டம்.. 
வாவ்.. இப்டி எல்லாம் அட்டட் டைம்ல பிரச்னை வரும்னு தெரிஞ்சிருந்தா, ஒரு நாலஞ்சு கேஸ், பீர், பிராந்தி ஒயின் ன்னு வகைக்கொண்ணா ஸ்டாக் பண்ணி இருக்கலாம்.. 
அப்புறம், செம கிக்கான பார்ன் வீடியோஸ் bunch ஆ டவுன்லோட் பண்ணி அசத்தி இருக்கலாம்.. 
Image result for get cheated and cryingImage result for get cheated and crying
இப்டி சபலம் எல்லாம் சகஜம் என் மாதிரி சபலபுத்திக் காரங்களுக்கு.. 
சென்ட் ஆயிரம் ரூபாய்க்குக் கூவிக் கூவி வித்த இடங்கள் எல்லாம் இன்னைக்கு சென்ட் 7 லட்சம் கொடுக்க ரெடியா இருந்தாலும், வெய்டிங் ல இருந்தாக வேண்டிய நெருக்கடி நிரம்பி விட்டது.. 

அன்றைக்கு நினைத்திருந்தால் ஐம்பதாயிரம் புரட்டி அரை ஏக்கரா வாங்கிப் போட்டிருக்கலாம்.. இன்றைக்கு அரை சென்ட் டுக்கே தகிடு தத்தோம் போட வேண்டி உள்ளது.. 

விட்டதைப் பிடிப்பதென்பது பெரும்பாலான தருவாய்களில் எவருக்குமே சாத்தியப் படுவதில்லை.. ஆனால், பிடித்திருக்கலாமே சுலபமாக என்கிற கேவல்கள் நெஞ்சை அடைக்கும் விதமாக பிரசன்னமாகி இம்சிக்கின்றன.. 

நடக்கிற நல்லது கெட்டது எதற்கும் நம்முடைய முயற்சிகள் பொறுப்பாகா.. ஆயினும் எவை நடப்பினும் நமது நிமித்தமே என்கிற அனுமானங்கள்.. நமக்கு  நிகழ்கிற யாவும், நம்மையும் தாண்டி நிகழ்வன .. நேரம் காலம் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்பனவெல்லாம் நம்முடைய ஆதங்கக் கூப்பாடு அன்றி வேறென்ன? 

உடலை உயிர் விட்டு நழுவும் இயல்பான நிகழ்வு கூட, காலத்தின் சதி செயல் போன்ற பிரம்மை நமக்கெல்லாம்.. 

மரணத்தை நிறுத்துகிற, தவிர்க்கிற, வெல்லுகிற .. திறன்கள் மட்டும் மனிதகுலத்துக்குக்  கடவுள் வழங்கி இருக்கும் பட்சத்தில், கடவுளையே ரத்தம் சதையோடும், புண்களோடும் வலிகளோடும் வந்து நிறுத்தி விடுவான் மனிதன். 


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...