Tuesday, August 4, 2015

தயவு செய்து யாரும் என்னை எழுப்பி விடாதீர்கள்..

உன்னிடம்
தொலைவதிலுள்ள
சுவாரஸ்யம்
எனக்கு நான்
கிடைப்பதில்
இருப்பதில்லை.. !

தனிமைப் பட்டுக்
கிடப்பதாக
எனக்கு நானே
வதந்தி பரப்பிக்
கொண்டிருந்தேன்..
உமது தோளில்
தலை சாய்க்கும்
திட்டங்களோடு..!!

அடங்கா மிருகம்
என்றொரு அடையாளம்
எனக்குண்டு..
ஆனால்
உன் மடி வந்து
சேர்கிறேன்
மொசு மொசு முயல்குட்டியாய்.. !

என் தலை
வருடுமுன் விரல்கள்
பிடித்துச்  சொடுக்கப் பார்க்கிறேன்..
அதற்குள்ளாக
நித்திரைக்குள்
மூழ்கச் செய்து
மூர்ச்சையாக்குகிறாய்..!!

நீ தந்த துயில் கலைக்க
எவர்க்கும் உரிமை இல்லை..
நீயே விழிக்கவும் வை..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...