Thursday, March 29, 2012

கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்..


...

எங்கெங்கிலும்
வியாபித்திருக்கிற
வெறுமை குறித்த
பிரக்ஞை எவர்க்குமில்லை...

-வீரியமில்லாத
பிரச்னைகள் குறித்து
மிகவும் குவிக்கப்
பட்டுள்ளன எல்லாரது
இதயங்களும்...

கவனிக்கப் படாத
அடர்ந்த இருளினூடே
கிஞ்சிற்று சிதறிக்
கிடக்கிற வெளிச்சம்
குறித்து அதீத கவனம்
எல்லாருக்கும்...


மௌனங்கள் கேட்பாரற்றும்
உளறல்கள் மட்டுமே
கவனிக்கப் பட்டும்...
வெற்றுத்தாள்
கண்டுகொள்ளப் படாமல்
கிறுக்கல்கள் மட்டுமே
ஈர்க்கப் பட்டும்...

இப்படியாக
வாழ்க்கை மொத்தமும்
இல்லாதது போல
என்றுமிருக்கிற
எதையும் எவரும்
கவனம் கொள்ளாமல்....

-என்றைக்கும்
இருப்பதாக நினைத்து
கவனிக்கிற எதுவும்
நிலைக்கப் போவதில்லை
என்கிற பிரக்ஞை
எவருக்குமில்லை...                         


சுந்தரவடிவேலு 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...