Thursday, April 5, 2012

மறுபடி மறுபடி..

மறுபடி மறுபடி...

மிகவும் சாஸ்வதம் போல
மிக மிக நிரந்தரம் போல
எவ்வளவு சம்பவங்கள்
வாழ்நாள் நெடுக..
எல்லோருக்குமாக 
அனுபவங்களாகி 
விடுகின்றன??

--அவைகளில் 
ஐக்கியமாகித்
 திளைக்கையில்
ஓர் சுவாரஸ்யம்...
பிய்ந்து உதிர்வது
போல் வெளியேறுகையில்
ஓர் ஆற்றாமை...!!

எல்லோருக்குமே
திரும்பிப் பார்ப்பதற்கான
எவ்வளவு 
மலரும் நினைவுகள்..
அழியாச்  சுவடுகள்??!..

சட்டையுரிக்கின்ற
பாம்பென - எவ்வளவோ
துயர்களைக் 
கழற்றி எறிந்திருக்கின்றன
காலம்..

நத்தை ஓடென
அடைந்து கொள்ளவும்
மீன் தூண்டிலென
மாட்டித் துள்ளவும்
பல சந்தர்ப்பங்கள்..

புலிகளிடம் சிக்கிப்
பிழைத்திருக்கிறோம்..
ஆடு முட்டி
சாகக் கிடந்திருக்கிறோம்..

மரணம் 
நிகழவிருப்பதற்கான
சாத்யக் கூறுகளையும்
நிதர்சன உண்மைகளையும்
தாண்டி .. 
--வாழ்க்கை மட்டுமே
வியாபித்து எங்கெங்கிலும்
விரிந்து கிடப்பதான
மாயையுள் மயங்கிச்
சிலிர்க்கிறோம்...
ஒவ்வொரு ஷணமும்..!!

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...