ஏதேனும் எழுத வேண்டும் என்கிற தீவிரம் சில சமயங்களில் பாடாய் படுத்துகையில் எழுதி பிளாகில் போட்டே விடுவேன். இல்லையெனில் உறக்கமே வராது. அப்படி ஒரு அனாவசிய வேகம், வெறி... என்னவோ நான் பெரிய பிரபல எழுத்தாளன் ஆவது நின்று போவது போல ஓர் பறக்காவெட்டித்தனம்..
உண்மையில் சாதிப்பவர்கள் அமைதியாகவும் யதார்த்தமாகவும் இருப்பார்கள்..என் மாதிரி சில அரைவேக்காடுகள் தான் இப்படி கிடந்து சாகும்கள்...
அப்படியான ஓர் வெறி வேகம், இந்த ரெண்டொரு நாட்கள் வரவில்லை. ஆகவே எழுதுகிற ஆவல் அறவே அற்று வெறுமே இருக்கத்தோன்றுகிறது இப்போது..இந்த விதமான மன அயர்ச்சி கூட ஓர் பலவீனம் போல தோன்றும், இயல்பாக எதையேனும் எழுதுபவர்களுக்கு... ஆகவே சுய சமாதானத்திற்காகவேனும் எதையேனும் அனர்த்தமாக நான்கு வகையறா விஷயங்களை ஓர் தத்துவஞானி போல தூவி விட்டோமே யானால் பெரிய மகா புருஷன் போல பந்தா விட ஏதுவாகும்...
மறுபடி நாளை சந்திப்போமா? (பெரிய சாலமன் பாப்பையா இவரு...)
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment