Wednesday, September 2, 2009

குசும்பு...

கற்று மறக்கலாம்


என்று களவாடச்


சென்றால்...


கவலைகள் கூட


மறக்கும் போலும்.,


களவுகள் தொடர்கின்றன...!


இந்த வாழ்க்கை நெடுகிலும்


நான் களவாடக் காத்துக்


கிடக்கிறது எல்லாமே...


எவர் கண்ணிலும் படாமல் எடு


என்கின்றன, நான்


திருடும் அனைத்தும்...


--அது அக்றிணை ஆகட்டும்


உயர்திணை ஆகட்டும்,


எல்லாமே என்னை ஆர்வமுடன்


திருடச்சொல்கின்றன...


என்னை அடைவதில் ஓர்


நிம்மதி இருப்பதாக அவைகள்


வாய் ஓயாமல் பிதற்றுகின்றன..




-A 3 போலீஸ் ஸ்டேஷனில்


வைத்து எஸ்.. ராஜா


என்னை விசாரித்த போதுகூட


இதே உண்மையைத்தான்


யதார்த்தமாகச்சொன்னேன்..


அண்ணன் நம்பலையே...


அடுத்த 15 நாட்கள் கழித்து


மறுவிசாரணை என்ற


கடுப்பேற்றும் அறிவிப்புடன்


உள்ளுக்குள்ளே நான்..




(அண்ணே..ஒரு சின்ன கற்பனை தான்..


எங்கனயாச்சும் F.I.R. file பண்ணிடாதீங்க அண்ணே...)




No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...