Friday, September 25, 2009

பகல் கனவு .

என்னுடைய நீ.. உன்னுடைய நான்...
நம்முடைய காதல்..
ஓர் நாள் இவ்வுலகில் நீ அற்று.. நான் அற்று..
நம் காதல் அற்று..
ஆனபோதிலும் இந்த அண்டவெளியில்
நீயும் நானும் காற்றாயாவது திரிவோமோ?
அப்போதும் சந்திப்போமோ..அடையாளம் காண்போமோ?
--அல்லது கண்டும் காணாமல் ஓடும் கயமையில்
இருப்போமோ?--ஒஹ்...நாம் அவ்விதம் செய்ய மாட்டோம்..மறுபடி நம் காதலை அனுஷ்டிக்கத்துவங்குவோம்...அனேகமாக அந்தக்காதல் நாம் பிரிவதற்காக இருக்காதென்றே கருதுகிறேன்..
வா...இந்தப் பிரபஞ்சக்காதல் ஆபத்தானது..எத்தனை நேசங்களைக் கொட்டிக்கொட்டி தீர்த்தாலும் நம்மை ஓர் இழையில் பிரித்து விட வைக்கும்..நீ இன்றி நானோ நான் இன்றி நீயோ இருக்கச்செய்து விடும்.. அல்லது இருவரையுமே இல்லாமல் செய்து விடும்..
இது மாயை நிரம்பிய பிரபஞ்சம்..நிரந்தரமற்றது.. நிம்மதிகளை நீர்க்குமிழ்கள் போல விநியோகிக்கிற பிரதேசம் இது... நிரந்தரம் என்பது வார்த்தை அளவில் மாத்திரம் ஊடுருவித்திரிகிற பிராந்தியம் இது.. வா.. இந்த ஈனப் பிரபஞ்சம் நம் அடர்ந்த காதலை அடை காக்க முடியாமல் தடுமாறும்..
--காற்றாகவாவது நிரந்தரமாக நாம் பிரியாமல் காதல் செய்கிற ஓர் பிராந்தியம் இந்த அண்டத்தில் எங்கேனும் இருக்கும்..அங்கே செல்வோம் வா..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...