நான் காலையில் நடைபயிற்சிக்காக என் ஊரின் ஒரு பள்ளி மைதானத்திற்கு செல்வது வழக்கம்.. பல வகையறாக்களில் அங்கே மனித குழாம்கள் ஒன்று கூடி நான்கைந்து பேர்களாகவும் ஏழு எட்டுப்பேர்களாகவும் சாரை சாரையாக எதையேனும் அரற்றியபடி அளவளாவிக்கொண்டே நடந்து கொண்டிருப்பார்கள்.. நடை பயிற்சியை காட்டிலும் அந்த உரையாடலும் அதன் கார சாரங்களுமே முக்கியம் போல மிகவும் சுவாரஸ்யமாக பேசிய வண்ணம் "ஏதோ" நடப்பார்கள்.. நான் எல்லா குழாம்களோடும் அவ்வபோது சேர்ந்த வண்ணம் நடப்பேன்.. கரண்ட் இஷ்யு என்னவோ அதனை அலசுவதில் கில்லாடிகள் மனிதர்கள்.. ஒரு ஜூனியர் விகடனோ நக்கீரனோ ஏற்படுத்தாத ஒரு வசீகரத்தை அவர்களின் விவாதம் ஏற்படுத்தி விடும்... பேச்சு சுதந்திரங்களும் கருத்து சுதந்திரங்களும் காற்றிலே மிதந்து என் காதுகளுக்கு விருந்தளிக்கும்.. என் கருத்தை ஒத்து எவரேனும் பேசும் பட்சத்தில் நானும் அதற்கு உடன்பாடாக என் பங்களிப்பிருக்குமே தவிர என் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் த்வநிக்கிற நபர்களிடம் நான் அளவு மீறாமல் பார்த்துக்கொள்வேன்..
இந்த ஒரு வார காலமாக சுவாமி நித்யானந்தா புராணம் ஓயாத அலையாக எங்கு பார்த்தாலும் பாய்ந்த வண்ணம் உள்ளது...
நானும் எனது பங்கிற்கு எதையேனும் சொல்ல முயல்கிறேன்..
தொடரும்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
hm... walking.
ReplyDelete