Tuesday, March 23, 2010

ஞானங்களும் இச்சைகளும்..{3}

ஏதோ மக்கள் தியானம் யோகா என்று சற்று தங்கள் உடல் நிலைகளையும் மனநிலைகளையும் சரி வர பராமரித்து வந்தனர்... அதற்கெல்லாம் ஆப்பு வைத்தது போல நம்ம நித்யா அந்த மாதிரியான உயர்ந்த விஷயங்களையே சந்தேகப்படும் படி செய்து விட்டார்...
ஞானி பொய்யனாகலம் .. ஞானம் பொய்மை ஆகாது..!

நித்யாவின் இயக்கத்தில் இருந்து வந்த பல லட்ச பக்தர்களுக்கு தாங்கொணா தர்மசங்கடங்களை விளைவித்த பெருமை நித்யாவையே சாரும்..

இனி மற்ற ஞானப்போர்வையில் அக்குரும்புகள் செய்து வந்த ஆசாமிகள் எல்லாம் ஜரூரான ஜர்ரூரில் உஷாராகி, தங்களுக்கு சிசுருஷைகள் செய்து வந்த பணிப்பெண்களை அப்புறப்படுத்தி விட்டு வயோதிகர்களை நியமிக்கிற அவசரத்தில் இறங்கியிருப்பார்கள் என்று அனுமானிக்கிறேன்...

அவர்களெல்லாம் நினைப்பார்கள் : நித்யாவாவது ஒரே ரஞ்சிதாவோடு தான் சிக்கினார்.., நமக்கு எவனாவது காமெரா வச்சிருந்தானுகன்னா ? அடங்கோப்பா சாமி.. தப்பிச்ச்சமடா.. இனி மேற்கொண்டாவது காவி வேட்டி காவி சட்டையை கழட்டாமப்பார்த்துக்கணும்... கக்கூசுக்குள்ள போனாக்கூட ஜெட்டி கழற்றப்ப காமெரா இருக்கானு பார்த்துக்கணும்...
படுபாவிப்பசங்களா இருக்கானுக .. அதவிடக்கொடுமயடா சாமி இந்தக்காலத்து டெக்நாலாஜி...

இனி நித்யா பக்தர்கள் எல்லாம் மாற்று சாமியார்களை தேடிப்போகிற சூழல் உருவாகி விட்டது.. அல்லது இந்தக்கருமாந்திரம் இதோட போகட்டும், இனி நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு கெடக்கலாம்... இன்னொரு பக்கம் போயி அந்த சாமியாரு வேற டைப்ல வேட்டு வச்சார்னா தாங்கவே முடியாது, இந்த தொந்தரவுக்கு நாமலே கூட சாமியாரா ஆகித்தொலஞ்சிடலாம், லேடீஸ் ஒன்லி பஸ் போல ஜென்ட்ஸ் ஒன்லி சாமியார் ஆகிட்டா கொஞ்சம் safe என்றாலும் இந்த ஹோமோசெக்ஸ் பிரச்சினை வேறு இருக்கிறது.. .

கோ எட் மாதிரி நடத்துனம்னா அதுக ஜோடி ஜோடியா அட்டூழியம் பண்ணிட்டு நம்மள போட்டுக்கொடுத்துரும்கள்...

ரிஸ்க் இல்லாம எந்த பிசினஸ்மே இல்லை தான்... அல்வா கடை ஆகட்டும் ஆன்மிகம் ஆகட்டும்...

சமாளிச்சுத்தான் பார்ப்போமே... அப்புறம் கடைசியா வேணும்னா மாட்டிக்கிலாம்.., அதுக்குள்ள நாலு சங்கதிகளைப் பண்ணிக்கிலாமில்ல...!!

சுந்தரவடிவேலு...


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...