எல்லா ரகளைகளுடனும்
இளமை குதூகலத்தில்
கும்மியடித்துக்கொண்டிருந்தது.
தீபாவளி என்றால்
அதற்கான எல்லா சுகந்தங்களும்
வீரியம் பெற்று
ரத்தத்தை அதீத சூடேற்றிய
வண்ணமாகக் கழியும்....
ஒற்றை வெடியைக்கூட
சுவாரஸ்யம் குன்றாமல்
லொட்டு லொட்டு என்று
ஓயாமல் வெடித்துத் திரிவோம்..
-இன்று கட்டு வெடி வெடிக்கவே
அசுவாரசியம் வந்து விடுகிறது..
இளமையின் அதே வீச்சில்
மறுபடி தீபாவளி வராதா
என்கிற ஏக்கம்
இப்போது வருகிற
எல்லா தீபவளிகளின் போதிலும்..!!
நம் அத்தனை
ஆனந்தங்களையும் நம்
குழந்தைகள் இந்த நாட்களில்
உணர்கிறார்களா என்பது
கேள்வி தான் என்ற போதிலும்
நமது சுவாரஸ்யம் குறித்த
இதே வித கேள்விகள்
அன்று நம் பெற்றோர்களிடமும்
இருந்திருக்குமோ என்னவோ...?
ஆக, எல்லா தலைமுறைகளுமே
தனக்கு நேர்ந்தவை மாத்திரமே
மகோன்னதமானவை என்கிற
தீவிர நம்பிக்கையில் வாழ்ந்து
வருவதாக அனுமானிக்கிறேன்...
No comments:
Post a Comment