விளையாடுகிறது
என்று நினைத்தால்...
--மனசைக்கீறி
ரணப்படுத்தி இருக்கிறது
காலப்பூனை..!
என்னைக் கடித்துக்
குதறப்போவது புரியாமல்
மாரில் அழுத்திக்
கொஞ்சிக்கொண்டிருந்திருக்கிறேன்...
--பூனை பாவனையில்
புலியாக இருக்கிறது காலம்..,
காலப்புலி...!!
மண்புழுவென
நினைத்த "காலம்"
பூராணாக ஊர்கிறது....
--சுழற்றும் சாட்டை
என கருதிய "காலம்"
கொத்தும் பாம்பாக நெளிகிறது..
பூக்களை சொரியுமென்று
நினைத்தால்
முட்களை செருகுகிறது காலம்..
பன்னீர் தெளிப்பதாக
நினைத்தால் எச்சிலை உமிழ்கிறது...
--என் மரணத்தைக்
காரணம் காட்டியாவது
காலத்தை நான்
குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தாமல் விடமாட்டேன்..!!!
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Saturday, October 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment