ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை இன்னொரு நபர் நம்புவதில்லை மற்றும் விரும்புவதில்லை... தங்கள் மகிழ்ச்சிகளையே அவநம்பிக்கைகள் கொண்டும் பயந்து கொண்டும் அனுபவிக்கிற மனோபாவத்தில் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மற்றவர்களது ஆனந்தம் சந்தேகமானதாகவும் பொய்யானதாகவும் தான் அடையாளப்பட்டிருக்கும்....
அடிக்கடி ஜகி வாசுதேவ் சொல்லுவார்.. ஆனந்தம் என்பது எவரும் எங்கும் தேடி அலைகிற விஷயம் அல்ல.., அது இயல்பாகவே எல்லார் வசமும் குடி கொண்டிருக்கிற தன்மை.... ஆனால் எனக்கென்னவோ மனிதர்களுக்கு பயம் தான் இயல்பாக குடி கொண்டுள்ளதென்றும் , ஆனந்தம் என்பது இப்படி சில ஞானிகள் அவ்வப்போது சொல்லித்தான் நம்மிடம் குடி கொண்டுள்ளது என்றெல்லாம் நினைக்க முடிகிறது...
ஞானமற்றும் மானமற்றும் கூட இருக்கலாம்.. ஆனந்தமற்றும் அமைதியற்றும் இருப்பது தான் பெரும் பாபம் என்பது என் அனுமானம்...!!
இது குறித்து ஓர் சின்ன நய்யாண்டி ஒன்றுண்டு...
ஓர் மனோதத்துவ டாக்டரை ஒருவர் சந்திக்க செல்கிறார்...
"எனக்கு எல்லாமே நல்லபடியா அமைஞ்சிருக்கு டாக்டர்.. நல்ல தொழில், அழகான குணவதியான மனைவி, அறிவான குழந்தைகள்... நிம்மதியான அமைதியான வாழ்க்கை..சண்டை வழக்கு இல்லாத சமரச வாழ்வு..."
அந்த மனோதத்துவ டாக்டர் கேட்கிறார்..:
"ஒ மை காட்....இதெல்லாம் உங்களுக்கு எத்தனை நாட்களாக?"
--சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment