சாஸ்வதம் என்பதும் நிரந்தரம் என்பதும் மனிதன் தோற்றுவித்த ஓர் பொருளுக்கோ, அதன் தன்மைக்கோ இருக்கலாமேயன்றி , மனிதனுக்கு அன்று..
மார்கோனி கண்டுபிடித்த ரேடியோவாகட்டும், கிரஹாம்பல் கண்டுபிடித்த டெலிபோனாகட்டும் பல்பு கண்டுபிடித்த எடிசனாகட்டும்..
ஆனபோதிலும் மனிதன் அன்றி அந்த நிரந்தரத்தன்மை என்கிற உணரத்தக்க ஓர் உணர்வு வேறெந்த ஜீவராசிகளுக்கோ , நிரந்தரமாக இந்த உலகில் என்றென்றும் வீற்றிருக்கிற மலைக்கோ கடலுக்கோ கூட இல்லை என்றே ஓர் மனிதன் என்கிற முறையில் அனுமானிக்கிறேன்.
தத்துவார்த்தமாக எதையேனும் சொல்ல வேண்டுமென்கிற எனது பிரயத்தனம், எனது தன்மையையே கேலிக்குரியதாய் மாற்றவிழைகிறதோ என்று கருதுகிறேன்.
இப்படித்தான்... எதையேனும் தத்து பித்தென்று உளறி அறிவுப்பூர்வமாக பேசி விட வேண்டுமென்கிற அவசரத்தில் அல்ப விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ள சாத்யப்படாமல் போய் விடுகிறது, சமயங்களில்....
புது வருடம் பிறந்ததென்று மக்கள் ஆர்ப்பரிப்பதைப்பார்க்கையில் எனக்கு ஹாசியமாக இருக்கிறது..
இவர்களது கூப்பாடுகளுக்கு மத்தியில் ஒரு நிமிடம் அண்ணாந்து அந்த வானத்து நிலவைப் பார்த்தேன்... எத்தனையோ கோடி ஆண்டுகளை தரிசித்த அதன் மௌனமான வெளிச்சம் .. பூமியில் இந்த அல்ப வாழ்க்கை கிடைத்தமைக்காக தலை கால் புரியாமல் ஆடிப்பாடுகிற மக்கள்...
இந்த முரண்பாட்டின் அடர்த்தி... மூர்ச்சை அடையச்செய்கிறது என்னை..
சுந்தரவடிவேலு ....
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment