என் முரண்கள்
எனக்கே சங்கடம்
அளிப்பவை...!
-வாயில் பீடியை
ஊதிக்கொண்டே
புகை பிடிக்காதீர்கள்
விளம்பரப்பலகை
எழுதிக்கொண்டிருப்பது
போல...
கும்பாபிஷேக
நெரிசலில்
மறந்து போகிற
தெய்வ பக்தி..
பெண்கள் மார்பகங்களில்
ஒன்றிப்போகிற மனசு..!!
மாய்ந்து மாய்ந்து
படித்து விட்டு
பரீட்சை நாளில்
புது ரிலீஸ் பட
தியட்டரில் வரிசையில்
நின்று கொண்டிருப்பது...
இழவு வீட்டில் போய்
இனிப்புப் பலகாரம்
கேட்டது போலிருக்கிறது
எனக்கிந்த வாழ்க்கை..!!
சுந்தரவடிவேலு..
ம்.ம்..
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு
பகிர்ந்தமைக்கு நன்றி