Tuesday, November 10, 2009

தேய்பிறை ரசிகன்...

என் கனவுகள்
தொலைவதற்காகக் காத்திருக்கின்றன..

நனவாக்கி விடலாம்
என்கிற என் நம்பிக்கைகளையும்
முயற்சிகளையும்
என்ன சமாதானப்படுத்தியும்
என் வசமாக்க சாத்யப்படவில்லை...

அவநம்பிக்கைகளின்
ஆளுமையில் என்
எழுச்சிகளுக்கு ஆயுள் தண்டனை...
அது மரண தண்டனையாகவே
மாறக்கூடும்....

தோற்கடிப்பதற்கு என்றே
லட்சியங்களை வைத்திருந்தேன்...
கனவுகளாகவும் கற்பனைகளாகவும்
அவைகளை வகைப் படுத்தி...


சுந்தரவடிவேலு.








No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...