எனக்குள்ளாக நீ
பிரவேசித்த நாள் ..
என் நினைவில் இல்லை...!
ஓர் மழலை
உருவானதற்குரிய காரணம்
புணர்தல் என்றாலும்
அது எந்தப் புணர்தல்
என்று வகைப்படுத்துவது
சாத்யமில்லை போலவே
நீ என்னுள் நினைவாகவும்
அதற்கு முன்னர்
கண்களுக்கு தரிசனம்
ஆனதும்...
எந்தத்தருணம் என்பது
புதிர் தான்..!!
ஆனால் உன்னை
காண்பதற்கு முன்பே
உன்னை என்றேனும் காண்பேன்
என்கிற ஓர் அசரீரி என்னுள்
ஒலித்துக்கொண்டே இருந்ததை
சொன்னால் எனக்கே நான்
நம்பத்தகாதவன் போலவே தான்
தெரியும்...
இவ்வளவையும் ஓர் ஞானி போல,
ஓர் தீர்க்கதரிசி போல..
தெரிந்து வைத்திருந்த நான்....
-இன்னொருவனை நீ
காதலிக்க என்னையே
தூதனுப்பக்கூடும்
என்பதை அனுமானிக்க
தவறிய வினோதம்....
என் ஞானத்தையே
நான் கேவலமாக
உணர வேண்டிய ஓர்
சூழலை உருவாக்கிற்று..!!
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment