Wednesday, January 18, 2017

பயில்வான்..
===============
Image result for bayilvaan modern arts
வர் கவிதையும் 
என்னை ஏனோ 
படிக்கத் தூண்டுவதே 
இல்லை... ஆனால் 
நான் எழுதுவதை 
அனைவரும் படித்துவிட 
வேண்டுமென்று 
அவாவும் அவசரமும் 
கொள்வதேனோ?

இந்த அநாகரீக 
சுயநலம் எனக்கே 
நாறுகிறது.. !

அர்த்தங்கள் பொதிந்தும் 
அழகியல் ததும்பியும் 
வெளியாகிற கவிதைகளை 
பிறர் பெரிதாகப் பிதற்றுகையில் 
வருவது பொறாமை 
ஒருபுறம் என்றால், 
என்னுடையதைப் படித்துவிட்டு 
ஏன் எவரும் இவ்வாறு 
குதிப்பதில்லை என்கிற 
அநியாய ஆதங்கம் மறுபுறம்.. !!

இளையராஜாவை 
தூக்கி அந்தப் பக்கம் நிறுத்திவிட 
வேண்டுமென்பது 
என்னுடைய இசைவெறியின் 
அகம்பாவம்.. 
தகரடப்பாக்களில்  
டண்டணக்கா தாளங்களை 
ஏற்படுத்துகிற எனக்கெதற்கு 
இவ்வளவு வறட்டு நம்பிக்கைகள் 
என்கிற அறிவான கேள்வி 
ஆரமபத்திலேயே வரத் 
தவறி விடுவதேனோ ?..

அங்ஙனமே பாரதியின் 
கவிதைகள், மற்றும் 
வள்ளுவனின் குரள்கள் 
அடக்கம்...!

சூரியனையே அற்பமாக 
அண்ணாந்து பார்த்துவிட 
முடிகிற என்னை..
காய்ந்து கிடக்கிற 
புற்கள் தடுக்கிவிழச் 
செய்கிற சூழ்ச்சியை 
நிச்சயம் நான் 
வணங்க மறுக்கிற 
தெய்வம் ஒன்று 
தான்  செய்திருக்கக் கூடும் 
என்பது எமது 
அசைக்க முடியாத 
நம்பிக்கை.. !!!

Image result for bayilvaan modern arts

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...