Sunday, June 19, 2016

நவீனத்துவத்தின் பின்னடைவு .. ?..

ள்ளுவனிடம் பாரதியிடம் கணினிகள் இருந்திருக்கும் பட்சத்தில், குறள்கள் .. கவிதைகள் யாவும் பற்பல பாகங்கள் கடந்து இந்த வாழ்வு இன்னும் அடர்த்தி கண்டிருக்கும்.. 
நம்மிடம்  பற்பல கணினிகள் இருந்துமே கூட .. அரைப் பக்கம் சுலபமாக நிரப்பிவிட முடியாத புதுக்கவிதைகள் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
.Image result for valluvan bharathi modern artsImage result for valluvan bharathi modern arts

திறன்கள் அவர்களுக்கு மூலைகளில் இருந்தன.. எழுத்தாணி கொண்டே ஓலைகள் கிழிபட 1330 குரல்கள் பதிவு செய்த வள்ளுவனாகட்டும், பற்பல கவிதைகள் கதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் நாவல்கள் புனைந்த பாரதி ஆகட்டும் .. 
இன்றுள்ள வசீகர அறிவியல் முன்னேற்றங்களின் நிமித்தம் மேற்கண்ட அந்த இரு மேதைகள் , அவர்களது சிருஷ்டிகள் இன்னும் செவ்வனே அலங்காரப் படுத்தப் பெற்றுள்ளன என்பதில் ஐயமேதும் இல்லை.. 

அன்றைய பற்பல மேதைகளின் சிருஷ்டிகளுமே இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சி நிமித்தம் படையலிட ப் பட்டுள்ளன .. 

பழங்காலக் கோவில்களில் அன்றைய சிற்பிகளின் இடையறாத செழிப்பு மிக உழைப்பால், கற்கள் உயிர் பெற்றன.. தத்ரூபம் தாண்டவமாடின.. 
இன்றைக்கோ, வெறும் அட்டைகளில் அலங்கார அமைப்பு செய்யவே சுணங்கிப் போய் வடிவம் தாறுமாறாகப் புலனாகின்றன.. 

அறிவியல் வளர்ச்சி பெறாத அன்றைய காலகட்டங்கள், மனிதன் எதனை செய்தாலும் அவைகளில்  நேர்த்தியும் ஒழுங்கும் ஒருங்கிழைந்து உன்னத விருந்து படைத்தன.. 

இன்றைய நவீனத் துவத்தில் 'ஆயத்த ஆடை' போன்ற சுலபத்தில் அனைத்துமே காசை விட்டெறிந்தால் உடனடியாக வந்து சேர்ந்து விடுவதால், தனிமனித உழைப்பு மீது, அந்தப் பிரத்யேகத் திறன் மீது எவருக்கும் ஈர்ப்பு வருவதில்லை. 
அச்சு அடித்தாற் போன்ற ஒரு விஷயத்தில் மனசு லயிக்கப் பெற்று 'கைத்திறனில்' பிறந்த இயல்பான வஸ்துக்களுக்கு விலை கொடுக்க கைவருவதில்லை.. 


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...