Saturday, December 12, 2015

மெட்ராஸ்........

சென்னை மழையை விடுத்து வேறொன்றை எழுத யோசிக்கிற திராணி அறவே அற்று விட்டதாகையால், சமீப எமது வெண் தாள்கள் எந்தக் கரைகளும் அற்று வெறுமே கிடக்கின்றன.. 

அந்த அடர்ந்த சோகங்களை கவிதை எழுதி எமது அஞ்சலி சமர்ப்பிக்க ஓர் எண்ணம் இருந்த போதிலும், அதென்னவோ ஒரு பரமானந்தத்தை கவிதையாக்கி குதூகலிக்கிற உற்சாகம் இந்த மழை குறித்து எழுதுவதற்கு நைந்து நமுத்துப் போனது போன்றொரு இறுக்கம் மனம் நெடுக.. 

நொந்து நூலாகிக் கிடக்கிற மக்களை எந்தக் கவிதை கொண்டு நிரப்ப?.. அன்றாட அவஸ்தைகளில் அறுந்து போய்க் கிடக்கிற அவர்களின் வாழ்க்கையை எந்தக் கவிதை ஊசியில் தையலிட??

இந்தத் தருவாயில், மற்றொன்றை யோசித்துப் புனைவதை  சிரமமாகவே மனசு ஏனோ உணர்வது வினோதமே.. 

அவர்களோடும் அவர்களது அவஸ்தைகளோடும் என்னால் ஊடாட சாத்யப் படவில்லை  என்ற போதிலும், இங்கிருந்து கொண்டே அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டங்களில் நானும் பங்கெடுக்கிற ஒரு சிறு கற்பனையில் மூழ்கித்  திளைக்கப் பார்க்கிறேன்.. 

வீடிழந்து பொருட்கள் இழந்து  ரெயில்வே பிளாட் ஃ பாரத்தில் என் குடும்பமும் தத்தளிக்கிற கற்பனை.. பசிக்குப் பாப்பா அழுகிறாள்.. பசி மயக்கத்தில் அம்மாவும் மனைவியும்....
எதையாவது செய்தே தீரவேண்டிய கட்டாயத்தில் நான்.. 

விபரீதம் நிகழாத பிராந்தியத்தில் உட்கார்ந்து கொண்டு கற்பனை செய்கிறேன்.. நாங்களும் சென்னை வாழ் பிரஜைகளாக இருந்திருக்கும் பட்சத்தில், மேற்சொன்ன யாவும் நிச்சயம் கற்பனைகளாயிருக்க வாய்ப்பில்லை என்றே  கருதுகிறேன்.. 

ஐயோ........................

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...