Thursday, October 29, 2015

பிய்ந்து போன கனவுகள் ........ [பழைய காதல் கவிதை..]

நீ ஞாபகம் வரும்போது
மாத்திரமே யதார்த்தமாக
எழுத வருகிறது எனக்கு..
Image result for love images
மற்றைய எது குறித்து
எவர் குறித்து எழுதினாலுமே
 வலிய திணிக்கப் பட்ட
செயற்கை அசிங்கம்
அங்கே சப்பணமிட்டு
உட்கார்ந்து கொள்வதை
சுலபத்தில் அடையாளம்
காண்பது சாத்தியமாகி
விடுகிறது எனக்கு.. !

ஆனால் எனது

புனைதலில்  நீ
ஆக்கிரமிக்கப் படுகையில்
ஒரு பூ  செடியில்
பூக்கத் துவங்குகிற
இயல்பு அங்கே
பிறக்கிற ஆச்சர்யத்தை
உணர்கிறேன்..
Image result for love images
உடல்ரீதியாக
அன்றெல்லாம் உன்னை
தரிசிக்க நேர்ந்த
அந்த அற்புதத்
தருணங்கள் கூட
மிக நேர்த்தியான,
நெடிய உபவாசத்திற்குப்
பிறகு வருகிற
பசி போன்று
அலாதி உணர்வுகள்
ததும்பின எனில்
மிகையன்று.. !!

இன்றோ

நாமதேயமற்றுப்
போய் விட்டீர்கள்
நீயும் உமது முகவரியும்..

காலத்தின் கட்டாயமோ

அல்லது உமது தீர்மானமோ
அறியேன்,
பரஸ்பரம் இனி இப்
பிரபஞ்சம் விட்டு
நழுவும் நாள் வரைக்கும்
உன்னை எனக்கு
தரிசிக்கிற வாய்ப்பே
சிறிதும் இல்லை என்கிற
சுடும் உண்மையை
ஒருவகை அவநம்பிகையினூடே
அடைகாத்து வருகிறது
மனது.. !!

Image result for love images

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...