Tuesday, July 29, 2014

மு க ம்

உமது 
பிரயோகத்திலுள்ள
அக்றிணைகளின் 
தகுதியில் பாதி கூட 
எமது உயர்திணை 
பெற்றிராதது 
மாபெரும் துரதிர்ஷ்டமே..!

என் உள்ளுணர்வுகள் 
மழலைமை 
ததும்புபவை எனிலும் 
என் வெளிமுகம் 
அதனைப் பிரதிபலிக்கிற 
வல்லமையை 
இழந்துள்ளமைக்காக 
நான் மிக வருந்துகிறேன் 
மற்றும் எனது 
முகத்தினைக் கோபிக்கிறேன்..!!

அகத்தின் பேரழகைக் 
காண்பிக்கத் தவறுகிற 
எனது முகத்தினை --
மலத்தினை மிதித்துவிட்ட 
இம்சையாக அசூயை 
கொள்ள நேர்கிறது..... !

பிய்த்தெறிந்து விட்டுப் 
புதிதாய்ப் பொருத்திக் கொள்கிற 
சட்டையாய் முகமில்லையே 
என்கிற வெறியும் வேதனையும் 
எனக்கு...!

உன்னால் மட்டும் அதே 
முகத்தை வைத்துக் கொண்டு 
எப்படி எப்பொழுதும் 
அதே அழகில் வீற்றிருப்பது 
சாத்யமாகிறது??

வேறு வேறு நினைவுகளை 
ஒவ்வொரு கணமும் 
மாற்றி செயல்படுகிற 
இதயத்தின் வசதி 
முகத்திற்கு இல்லாமற்போனது 
என்போன்றவர்களின் குறைபாடு... 
இதற்கெங்கே செய்வதாம் 
முறையீடு??

ஒவ்வொரு பிராயத்திலும் 
காலங்கள் செருகுகிற 
பாவனைகளை 
--என்னுடையவை போன்ற 
சில முகங்கள்--
சரிவர உள்வாங்கிக் கொள்ளாமல் 
தாறுமாறாகத் தடம்புரண்டவாறு 
தரிசிப்பவர்களை 
மிரளச் செய்கின்றன..!

அவ்விதம் மிரண்டவர்களில் 
நீயும் ஒருத்தி என்பதே 
என்னில் அடர்ந்து கிடக்கிற 
கவலையே அன்றி... ---

எமது அசிங்கமான 
முகம் குறித்தோ 
அது கண்டு மிரள்கிற 
இன்னபிறர் குறித்தோ 
அன்று..!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...