ஆங்கிலத்தில் ஏதேனும் முயலலாம் என்கிற எனது பிரயத்தனம், அநேகமாக அதிகப்பிரசங்கமாக உணரப்படும் என்பதாகவே நான் அபிப்ராயிக்கிறேன்...
அந்த மொழியிலே ஓர் சரளம் வேண்டும் என்பது என் பல நாள் கனா.. இன்னும் அது கனவாகவே என்னில் உலா வந்த வண்ணமுள்ளது..
ஓர் ஆங்கிலப்புலமை வாய்ந்த நபரிடம் வாட் இஸ் யுவர் நேம் என்பதை மாத்திரம் உத்தரவாதமாக என்னால் கேட்க முடியும்... மற்றபடி அவரது புலமைக்கு ஈடு கொடுக்கும் வகையில் தொடர்ந்து உரையாற்றுகிற திராணி என்னிடம் இல்லை..
இதற்காக குற்ற உணர்வில் பரிதவித்த காலங்கள் உண்டு.. இன்றெல்லாம் தமிழை மறக்காமல் இருந்தாலே பெரிய விஷயம் என்கிற பக்குவம் {?} வந்து விட்டது..
இப்படித்தான் வாழ்க்கை ஒரு கட்டத்தில் பெரிய எதிர்பார்ப்பிலும் மற்றொரு கட்டத்தில் ஏமாற்றத்துடனும் அமைந்து விடுகிறது.. அதற்காக பெரிய ரோஷக்காரன் போல வாழ்வையோ காலத்தையோ இளப்பமாக நினைத்து விட முடிவதில்லை..
காலம் நமக்கு அளித்த கொடை இவ்வளவே., இதனை செவ்வனே அனுசரிப்பதே நேர்மை.. அதனை விடுத்து காலம் நம்மை இப்படி படுகுழியில் தள்ளி விட்டதாக புலம்பிக்கொண்டிருப்பது மடைமை...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Tuesday, September 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
முதற்கண் பிச்சை இடுபவர்கள் நிறுத்த வேண்டும்.. பிச்சைக் காரர்கள் தானாகக் காணாமல் போவார்கள்.. உழைக்கத் துவங்கி காசு சேர்ப்பார்க...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
No comments:
Post a Comment