நடக்கவிருக்கிற செம்மொழி மாநாடு எந்த வகையில் மக்களை அவர்களது வாழ்க்கைத்தரங்களை மேம்படுத்தப்போகிறது ? அப்படி மேம்படுத்துகிற வல்லன்மைகள் கொண்டதா இந்த மாநாடு... ?
பற்பலரும் பற்பல அனுமானங்களை, கருத்துக்களை பேச்சிலும் கட்டுரைகளிலும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது..
பருப்பு அரிசி விலைகளை கட்டுப்படுத்துகிற யோக்யதையை காணோம்... இத்தனை கோடிகளைகொட்டி மாநாடு நடத்துகிறார்களாம்...
-- இப்படித்துவங்குகிற புலம்பல்கள், பல தினுசுகளில் நீள்கிறது..!!
தமிழை முன்னிறுத்துகிற பிரயத்தனங்கள் திமுகாவிற்கு இன்றோ நேற்றோ விளைந்ததன்று.. இது ஆரம்ப காலம் தொட்டு நிகழ்ந்து வருகிற கூத்து... என்ன செய்தும் தமிழ் அப்படி ஒன்றும் பிரதானமாக எதிலும் கோலோச்சுவதாகத் தெரியவில்லை... கருணாநிதியே தன் பிறந்த நாளை ஜூன் 3 என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டால் தான் தற்குறி கூட புரிந்து கொள்ள முடியுமே தவிர மாசி மாசம் என்றோ ௨௦ ஆம் தேதி என்றோ சொன்னாலோ எழுதிககாட்டினாலோ ஒன்றும் விளங்கிக்கொள்ளப்போவதில்லை... ஒரு நிறுவனத்தில் வேலைக்கு apply செய்வதற்கு கூட resume ஆங்கிலத்தில் இருந்தால் தான் நாகரீகம் என்கிற போக்கு abcd ஒழுங்காகத் தெரியாதவனுக்குக் கூட..
தமிழ்நாட்டில் வசிக்கிற நாம், ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவதை தானே பிரமாதமாகக் கருதுகிறோம்... எத்தனை பேர்கள் செக் லீபிலும், இன்னபிற முக்கிய ஆவணங்களிலும் தமிழில் signature செய்கிறார்கள்?.. அவர்களையும் அறியாமல் ஆங்கிலம் தான் அங்கே தவழ்கிறது..
எத்தனை மாநாடுகள் இந்த மாதிரி நடந்தாலும் இதே தலையெழுத்து தான் நம் மாநிலத்துக்கு... தமிழ் உயரிய மொழிதான், உன்னத மொழிதான்.. தமிழ் போலொரு இனிதான மொழி இல்லைதான்.. நன்கு பண்பட்ட மொழிதான்... ஆன போதிலும் தமிழ் தமிழ் என்று அழுபவர்களும் சிரிப்பவர்களும் , தன்னை உயர்த்திக்காண்பிக்கவும், பகுத்தறிவாளனாக உணர்த்தவும் ரகசியமாக ஆங்கிலம் பேசவே ஆசைப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை, சத்யம்..
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment