Saturday, June 12, 2010

அழகிய தமிழ்மகன்கள்...

நடக்கவிருக்கிற செம்மொழி மாநாடு எந்த வகையில் மக்களை அவர்களது வாழ்க்கைத்தரங்களை மேம்படுத்தப்போகிறது ? அப்படி மேம்படுத்துகிற வல்லன்மைகள் கொண்டதா இந்த மாநாடு... ?
பற்பலரும் பற்பல அனுமானங்களை, கருத்துக்களை பேச்சிலும் கட்டுரைகளிலும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது..
பருப்பு அரிசி விலைகளை கட்டுப்படுத்துகிற யோக்யதையை காணோம்... இத்தனை கோடிகளைகொட்டி மாநாடு நடத்துகிறார்களாம்...
-- இப்படித்துவங்குகிற புலம்பல்கள், பல தினுசுகளில் நீள்கிறது..!!

தமிழை முன்னிறுத்துகிற பிரயத்தனங்கள் திமுகாவிற்கு இன்றோ நேற்றோ விளைந்ததன்று.. இது ஆரம்ப காலம் தொட்டு நிகழ்ந்து வருகிற கூத்து... என்ன செய்தும் தமிழ் அப்படி ஒன்றும் பிரதானமாக எதிலும் கோலோச்சுவதாகத் தெரியவில்லை... கருணாநிதியே தன் பிறந்த நாளை ஜூன் 3  என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டால் தான் தற்குறி கூட புரிந்து கொள்ள முடியுமே தவிர மாசி மாசம் என்றோ ௨௦ ஆம் தேதி என்றோ சொன்னாலோ எழுதிககாட்டினாலோ ஒன்றும் விளங்கிக்கொள்ளப்போவதில்லை... ஒரு நிறுவனத்தில் வேலைக்கு apply செய்வதற்கு கூட resume  ஆங்கிலத்தில் இருந்தால் தான் நாகரீகம் என்கிற போக்கு abcd   ஒழுங்காகத் தெரியாதவனுக்குக் கூட..
தமிழ்நாட்டில் வசிக்கிற நாம், ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவதை தானே பிரமாதமாகக் கருதுகிறோம்... எத்தனை பேர்கள் செக் லீபிலும், இன்னபிற முக்கிய ஆவணங்களிலும் தமிழில் signature செய்கிறார்கள்?.. அவர்களையும் அறியாமல் ஆங்கிலம் தான் அங்கே தவழ்கிறது..
எத்தனை மாநாடுகள் இந்த மாதிரி நடந்தாலும் இதே தலையெழுத்து தான் நம் மாநிலத்துக்கு... தமிழ் உயரிய மொழிதான், உன்னத மொழிதான்.. தமிழ் போலொரு இனிதான மொழி இல்லைதான்.. நன்கு பண்பட்ட மொழிதான்... ஆன போதிலும் தமிழ் தமிழ் என்று அழுபவர்களும் சிரிப்பவர்களும் ,  தன்னை உயர்த்திக்காண்பிக்கவும், பகுத்தறிவாளனாக உணர்த்தவும்  ரகசியமாக ஆங்கிலம் பேசவே  ஆசைப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை, சத்யம்..

சுந்தரவடிவேலு..          

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...